world

img

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 2000யை தாண்டியது

காபூல், அக்.8- ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள  ஹெராத் நகரின்  வட மேற்கு பகுதி யில் 40 கி.மீ தொலைவில் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் 6.3, 5.9 மற்றும் 5.5 என்ற ரிக்டர் அளவில்தொடர்ந்து மூன்று முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 12 கிராமங்கள் பெருமளவு உருக்கு லைந்துள்ளன. ஜெண்டா ஜன என்ற மாவட்டத்தில் 4 கிராமங்களில் பல வீடுகள்  முற்றிலுமாக இடிந்து  விட்டன.ஃபரா மற்றும் பேட்ஜஸ் மாவட்டத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஜெண்டா ஜன  மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 12 ஆம்புலன்சுகளை அனுப்பியுள்ள தாக ஆப்கானில் உள்ள உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்த நிலையில் ஞாயிறன்று பலி எண்ணிக்கை 2000  ஆக அதி கரித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி யுள்ளவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவ தால் பலி எண்ணிக்கை மேலும் அதி கரிக்கும் என  தலிபான் அரசின் உயர் அதிகாரி அப்துல் வாஹத் ராயன் கூறியுள்ளார்.  500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிலநடுக்கத்தில்  இடிந்து விழுந்துள்ளன என ஐநா சபையின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அமைப்பு கூறியுள்ளது.இதுவரை 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் (4,500 மக்கள் ) கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஹெராத் நகரில் மட்டும் 300 குடும்பங்கள் (2,100 மக்கள் )  இடம் பெயர்ந்துவிட்டனர் என்றும் அவர்கள் இடிந்து போன கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.    ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின்  ராணுவ வெறியாட்டம் மற்றும் தலிபான்கள் தலைமையிலான ஆட்சியினால் இருந்த வறுமை, பசி ஆகியவற்றை இந்த இயற்கை பேரிடர் மேலும் அதிகரித்துள்ளது.2021 இல் ஆப்கானை தலிபான்களிடம் அமெரிக்கா கொடுத்த பிறகு சர்வதேச உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின.இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் 7 மில்லியன் டாலர் வெளிநாட்டு வங்கி கை யிருப்பை அமெரிக்கா முடக்கி  ஆப்கானிஸ்தானுக்கு  மேலும் நெருக்கடி யை ஏற்படுத்தி வருகிறது.