வாஷிங்டன், ஜூன் 9 - உலக கேரள சபையின் அமெரிக்க மண்டல மாநாட்டில் பங்கேற்பதற் காக முதல்வர் பினராயி விஜயன் நியூயார்க் நகரை வந்தடைந்தார். அவருடன் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் மற்றும் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். விமான நிலையத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை நோர்கா இயக்குநர் டாக்டர். எம். அனிருத்தன், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மன்மதன் நாயர் ஆகியோர் வரவேற்றனர். மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. உலக கேரள சபையின் மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 11ஆம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமெரிக்கவாழ் மக்களுடன் முதல்வர் உரையாற்றுகிறார்.