நியூயார்க், செப். 28- ஐ.நா. பொது அவை விவாதத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தான் செய்து வரும் இனப்படுகொலையையும், பாலஸ்தீனர்களின் நிலங்களை அபகரிப்பதையும் நியாயப்படுத்தி பேசினார்.
ஐ.நா. பொது அவையின் 79வது அமர்வு செப்டம்பர் 24 அன்று துவங்கியது. இந்த அமர்வு செப்டம்பர் 30 அன்று முடிவடைய உள்ளது. இந்த பொது அமர்வு விவாதத்தில் இஸ்ரேலின் இனப்படு கொலை போர் முக்கிய விவாதமாக உள்ளது. பல நாட்டின் தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இஸ்ரேலின் நடவடிக்கையை விமர்சித்தும் பேசினார்.
இந்நிலையில் பொது அவையில் பேசிய நேதன்யாகு, தனது இனப்படுகொலை அட்டூழி யங்களை நியாயப்படுத்தியதுடன், மத்திய கிழக்கில் தனது ராணுவ ஆதிக்கத்திற்கும் இனப்படு கொலைக்கு எதிராகவும் உள்ள நாடுகளை மோச மான நாடுகளாக சித்தரித்தார். \நேதன்யாகு பேசும் போது, தனது, இந்தியா முதல் இஸ்ரேல் வரையிலான செங்கடல் பாதை வழி யாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளடங்கிய வரை படத்தை கையில் தூக்கிக் காட்டினார். அதில் ஒரு வரைபடத்தில் ஈரான், இராக், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளை கருப்பு வண்ணத்தில் குறிப்பிட்டு அந்நாடுகளை மோசமான - சாபம் நிறைந்த நாடுகள் என பகிரங்கமான முறையில் அநாகரீகமாக இழித்து ரைத்தார்.
அதேபோல இஸ்ரேலுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவும், உதவியும் செய்யும் எகிப்து, சூடான், சவூதி அரேபியா, இந்தியா ஆகிய நாடுகளை பச்சை நிறத்தில் ஆசீர்வாதம் நிறைந்த நாடுகள் எனக் குறிப்பிட்டு பேசினார்.
ஆனால் இந்த இரண்டு வரைபடத்திலும் இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா, மேற்கு கரை, கோலன் குன்றுகள் ஆகிய வற்றை இஸ்ரேலின் பகுதிகளாக காட்டியிருந்தார். மேலும் இஸ்ரேல் எந்த தவறும் செய்யவில்லை எனவும் ஈரானின் தூண்டுதலினால் அவர்களது நிழல் ராணுவங்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் முதலைக் கண்ணீர் வடித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சர்வதேச சட்டங்களை மீறி செயல்படுவதுடன் ஐ.நா. அவையில் பாலஸ்தீனம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் இறையாண்மையை அவமதிக்கும் விதமாகவும் பேசியுள்ளார். அது மட்டுமின்றி அவரது செயல்பாடு ஹிஸ்புல்லா, ஹவுதி, ஹமாஸ் ஆகிய பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளின் கோபத்தை மேலும் அதிகப் படுத்தி மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தூண்டி விடக்கூடிய செயல் என கடுமையான விமர்ச னங்கள் எழுந்துள்ளன.