நியூயார்க்.செப்.29- கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் எழுந்துள்ள மோசமான வன்முறை குறி த்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்திற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்
தொடர்ந்து அதிகரித்து வருகிற வன்முறையை நிறுத்த வேண்டும். இதற்காக அனைத்து தரப்பினரும் பின்வாங்க வேண்டும் என் றும் குட்டரெஸ் தெரிவித்து ள்ளார்.
முழு அளவில் நடக்க உள்ள போர் லெபனான் மற் றும் இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமல்ல மத்திய கிழக்கு முதல் உலக நாடுகள் அனைத்திலும் மிக மோச மான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“பாதுகாப்பு கவுன்சில் தீர் மானம் 1701-ஐ முழுமையாக செயல்படுத்தவேண்டும். காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவருவது டன் அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.