புடாபெஸ்ட், ஆக.29-
19-வது உலக தடகள சாம்பி யன்ஷிப் தொடர் ஹங்கேரி தலை நகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆடவர் ஈட்டி எறி தல் பிரிவில் இறுதி சுற்றில் இந்தியா வின் நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் தங்க நாயகனுமான நீரஜ் சோப்ரா 88.17 மீ தூரம் ஈட்டி எறிந்து, 40 ஆண்டுகால உலக தடகள வர லாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனை யை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்தார். நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீ) வெள்ளிப் பதக்கமும், செக்குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் (86.67 மீ) வெண் கலப்பதக்கமும் வென்ற னர்.
பதக்கம் பெற்றபின் இந்தியா வின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக் களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து மூவர்ண கொடியை ஏந்தியபடி நின்ற நீரஜ் சோப்ரா மைதானத்தில் புகைப்படம் எடுக்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை அழைத்தார். அர்ஷத் நதீம் சந்தோச மாக ஓடி வந்து நீரஜ் சோப்ரா வுடன் கட்டியணைத்தபடி, மூவர்ண கொடியுடன் சேர்ந்த நின்று புகைப் படம் எடுத்தார்.
மூவர்ண கொடியுடன் புகைப் படம் எடுக்க அழைத்த இந்தியா வின் நீரஜ் சோப்ராவுக்கும், மூவர்ண கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் செயலுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட் டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போதைய நிலையில் உலகின் முக்கிய டிரெண்டிங் செய்தியாக இந்தியவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், மூவர்ண கொடி புகைப்படம் உள் ளது.
இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் ஒரு சேர கொண்டாட்டம்
நீரஜ் சோப்ரா - அர்ஷத் நதீம் மூவர்ணக்கொடியுடன் புகைப்படம் எடுத்த சம்பவம் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் இத யங்களை வென்றது. “நாங்கள் சகோதரர்கள்” என்ற ஹேஸ்டேக்குடன் இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்தை ஏதோ ஒரு உல கக்கோப்பை வெற்றி போன்று கொண்டாடி வருகின்றனர். முக்கிய மாக நீரஜ் சோப்ரா 40 கால வரலாற்றுடன் நாட்டிற்கு தங்கப்பதக் கம் வென்று கொடுத்த விஷயத்தைவிட பாகிஸ்தான் வீரருடன் மூவர்ணக்கொடியுடன் போஸ் கொடுத்த விவகாரம்தான் கொண்டா டப்படும் விஷயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.