ஐப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் புகுஷிமா மாகாணம் மற்றும் அந்நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாகாணத்தில் இன்று மதியம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் இபராகி மாகாணத்தின் பசிபிக் கடல் பகுதியில் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளது.