ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டைக் களைந்து முறையான ஊதியத்தை வழங்கச் செய்யும் கொள்கையை இறுதிப்படுத்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் கிஷிதா புமியோ அறிவித்துள்ளார்.
இந்த வேறுபாடு களையப்பட வேண்டும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாகவே போராடி வருகிறது. நாடாளுமன்றத்திலும் அக்கட்சி உறுப்பினர்கள் இதை வலுவாக எழுப்பி வந்தனர். இந்நிலையில், ஊதிய விகிதத்தில் இருக்கும் வேறுபாடுகளைக் களைவோம் என்ற உறுதிமொழியை பிரதமர் கிஷிதா புமியோ கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு நல்லதுதான் என்றாலும். இது போதாது என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி கசுவோ விமர்சித்திருக்கிறார். ஊதிய வேறுபாடுகளை அனைத்து நிறுவனங்களும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.