world

img

நோபல் பரிசுக்கு 329 பேர் பரிந்துரை....

நார்வே:
2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் விருது  கமிட்டி தெரிவித்துள்ளது.இதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்  கிரேட்டா தன்பெர்க், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.  2021 நோபல் பரிசுக்கு 234 தனிநபர்களும், 95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நோபல் குழு அக்டோபரில் முடிவை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

;