world

சீனாவில் முதலீடு செய்ய அமெ. நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

வாஷிங்டன், ஆக. 11 - அமெரிக்க நிறுவனங்கள் சீனா வில் முதலீடு செய்வதை கட்டுப்படுத்த கருவூலத் துறைக்கு வழிகாட்டும் ஒரு நிர்வாக உத்தரவை அமெரிக்க ஜனாதி பதி ஜோ பைடன்  கொண்டு வந்துள் ளார். தொழில்நுட்பம் மற்றும் ராணுவ ரீதியாக தங்களை பலப்படுத்திவரும் நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தற்காத்துக்கொள்ளவே இந்த உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் இது ஒரு தேசிய அவசர நிலை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம்  சீனாவில்  உற்பத்தி செய்யப்பட்டு வரும் குறைக் கடத்திகள், குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு ஆகிய மூன்று துறைகளிலும் அமெரிக்க நிறுவ னங்களின் நேரடி முதலீட்டை  கட்டப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியும். நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உள்ளடக்கியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அமெரிக்கா வின் இந்த கட்டுப்பாடு  ஒரு ‘தொழில் நுட்பத்தடை’  மற்றும் உலகமயமாக்க லுக்கு எதிரான நடவடிக்கை என தெரி வித்துள்ள சீனா, இந்த முதலீட்டுக் கொள்கையானது உலகளாவிய விநி யோகச் சங்கிலிகளை ‘கடுமையாகச் சீர்குலைக்கிறது’ என்றும் தெரி வித்துள்ளது.  இந்த கட்டுப்பாட்டை கொண்டுவர இவ்வளவு காலம் பிடித்த பின்னணி யில் அமெரிக்காவில் ஒரு பெரும் விவாதம் இருப்பதை காட்டுகிறது.

மேலும் இவ்விவாதம் சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் முடிந்ததற்கு பைடன் நிர்வாகத்தினரின் சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தமே காரணம் என சீன பத்திரிகைகள் கூறுகின்றன. இந்த கட்டுப்பாடு  “சீனாவுடனான சட்டப்பூர்வமான வணிகத்தை சீர்குலைக் காது” எனவும்  அமெரிக்காவின் வலு வான உள்நாட்டு கவலைகளை உறு திப்படுத்தும்என்றும் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து கூறி  வருகின்றனர். இருப்பினும் இது வரம்பு களின் தீங்கு விளைவிக்கும்  தன்மை யையோ அல்லது தாக்கத்தையோ மாற் றாது. ஆனால் இந்த செய்தி வெளி வந்ததில் இருந்து, அமெரிக்காவில் எதிர்ப்பு உருவாக்கி உள்ளது. ராணுவம்,தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக தனது ஆதிக்க த்தை நிலைநாட்டிக்கொள்ள  அமெரிக்க அரசு சீனாவிற்கு எதிராக, ஏற்றுமதி மற்றும் முதலீட்டுக் கொள்கைகளை தொடர்ந்து கடுமையாக்கி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஈர்க்கப் பட்டு அமெரிக்க நிறுவனங்கள், சீனா வில் முதலீடு செய்கின்றன .இது இரு நாட்டு வளர்ச்சிக்கும் உதவி வரு கிறது. எனினும் அமெரிக்காவை விட  சீனா முன்னேறி லாபம் ஈட்டும் துறை களை குறிவைத்து வருகிறது. அதன்  வெளிப்பாடாக சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி யை தடுக்கவே  இந்த கட்டுப்பாடையும் விதித்துள்ளது.