டோக்கியோ, டிச.15- பல ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு வயதான காலத்தில் ஓய்வு எடுக்க முடியாமல், ஏதாவது ஒரு வேலை செய்தால்தான் வாழ்க்கை யை ஓட்ட முடியும் என்ற அவலநிலையில் ஜப்பானிய முதியவர்கள் இருக்கிறார்கள். நவம்பர் 2022-ல் ஜப்பானின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சரவை சில புள்ளிவிபரங்களை வெளியிட்டது. அதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 விழுக்காட்டினர் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29.1 விழுக்காடு என்றும் அதில் தெரிய வந்தது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் விகிதாச்சாரம் உலகிலேயே அதிகமான ஒன்றாகும். இந்த எண்ணிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தைத் தருவதாக அரசு கூறுகிறது.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், 65 வயதுக்குப் பிறகு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்தே வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நிலைமை இருந்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள விபரங்களின்படி, 65 வயதுக்கு மேற்பட்ட 90 லட்சம் பேர் வேலை செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள். ஒட்டுமொத்த வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கையில் இது 13.5 விழுக்கா டாகும். 65 வயது முதல் 69 வயது வரையிலான வர்களில் 50 விழுக்காட்டினர் தற்போது வேலை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த சிபா கெய்செய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிஹோ ஃபுஜினாமி, ‘‘பெரும்பாலான வளர்ந்த பொருளாதாரங்களும் முதுமை அடைந்தே வரு கின்றன. ஆனால், ஜப்பானின் வேகம் அதிக மானது. அதேவேளையில், சில மேற்கத்திய நாடுகளில் உள்ள முதியவர்களை விட, ஜப்பா னின் முதியவர்கள் மத்தியில் வேலை செய் வதற்கான விருப்பம் அதிகமாக உள்ளது’’ என்கிறார். முதியவர்களின் வேலை நிலவரம், பணிச்சூழல் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஆய் வுகளை ஃபுஜினாமி மேற்கொண்டு வருகிறார். 60 வயது ஆனவுடன் ஓய்வு பெறாமல் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறீர்களா என்ற கேள்வியை முன்வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதற்கு ஜப்பானில் 40.2 விழுக் காட்டினர், வேலை செய்யத்தயார் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களின் எண்ணி க்கை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளில் சரி என்று பதிலளித்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை யை விட அதிகமாகும். சமூகப் பாதுகாப்புத் திட்டம் பலவீனமானதே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மாரடைப்புக்குப் பிறகும்
சில மாதங்களுக்கு முன்பாக 76 வயதான கோய்ச்சி கஷிவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே தனது வேலை யைத் தொடர வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் அவர் பணியாற்றுகிறார். நன்கு சம்பாதித்து, நல்ல வாழ்க்கையை வாழ்ந்த அவரின் சேமிப்பு ஓய்வுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குதான் தாக்குப்பிடித்தது. 65 வயதில் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவானது. இவரைப் போன்று லட்சக்கணக்கான முதிய வர்கள் இந்த நிலையில்தான் உள்ளனர். அதுவும் அவர்களின் பல ஆண்டுகள் அனுபவத்திற்கு ஏற்ற வேலையும் கிடைப்பதில்லை. பொறி யியல் வல்லுநர்கள் பலர் நிறுவனங்களின் வாயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 60 வயதில் ஓய்வு பெற்றாலும், 65 வயதுக்குப் பிறகுதான் ஓய்வூதியம் கிடைக்கும். இதனால், பணிக்காலத்தையே 65 வயது என்ற வரம்புக்கு உயர்த்துவது பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. முதலாளித்துவ நாடுகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஏராளமான ஓட்டைகளுடன் இருப்பதையே ஜப்பானின் நிலைமை அம்பலப்படுத்தியுள்ளது. தொழி லாளர் சந்தையில் இவர்களின் மதிப்பு அடிமாட்டின் மதிப்பாகவே இருக்கிறது.