மாஸ்கோ, செப்.22- ரஷ்யாவின் ரூபிள் மற்றும் சீனாவின் யுவான் ஆகிய இரண்டு நாணயங்களைக் கொண்டு தங்கள் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வது மிகவும் வசதியாக உள்ளது என்று ரஷ்ய எண்ணெய் நிறுவனமான கேஸ்புரோம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நெருக்கடிக்குப்பிறகு, அமெரிக்காவின் ஒருதரப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பல நாடுகள், அவரவர் நாணயங்களைக் கொண்டு பிற நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய வற்றைப் பெறும் நாடுகள், இதை நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டுள்ளன. ஒரு நிலையற்ற சூழல் உருவாவதால் டாலர் வேண்டாம் என்று இந்த நாடுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனத் தலைவர் அலெக்சி மில்லர், “அவரவர் நாணயங்களைக் கொண்டு பரஸ்பர வர்த்தகத்தை மேற்கொள் வதில் இருதரப்புக்கும் நன்மை உள்ளது. நேரத்துக்கு பணத்தைக் கொடுத்துக் கொள்ளலாம். நம்பத்தகுந்ததாகவும், நடை முறை சாத்தியமுள்ளதாகவும் இருக்கிறது. எரிவாயு வர்த்தகத்தில் ரஷ்யா மற்றும் சீனா வுக்கு இடையிலான பணப்பரிமாற்றத்தை ரூபிள் மற்றும் யுவானி செய்யத் தொடங்கி விட்டோம்” என்று குறிப்பிட்டார். மில்லரும், சீனாவின் தேசிய பெட்ரோலிய ஆணைய வாரியத் தலைவர் டாய் ஹவு லியாங்-கும் காணொளி வாயிலாகப் பேச்சு வார்த்தை நடத்தினர். ரஷ்யா மற்றும் சீனாவின் கிழக்குக் கோடி எல்லை வழியாக எரிவாயுவை விநியோகம் செய்வது பற்றி இருவரும் ஆலோ சனை நடத்தினர்.
சைபீரியா வழியாக விநியோகம் செய்ய லாம் என்ற சீனாவின் கருத்துடன் உடன்பட்ட மில்லர், அதற்கான கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு வருவது பற்றிப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பணிகள் நிறைவு பெற்ற பிறகு விநியோகம் தொடங்கலாம் என்று ரஷ்யத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் புதிய குழாய்கள் வழி யாக சீனாவுக்கு எரிவாயு கிடைக்கத் தொடங்கும் என்று கேஸ்புரோம் தெரிவித்துள் ளது. சைபீரியன் ஃபோர்ஸ் 2 என்ற குழாய் வசதியும், மங்கோலியாவில் உள்ள சோயுஸ் ஓஸ்டோக் குழாய் கட்டமைப்பும் புதியப் போக்குவரத்தைத் தொடங்கும் என்று இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பாதைதான் தற்போது உலக எரிபொருள் விநியோகம் செய்பவர் ளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இது போன்ற புதிய போக்குவரத்துப் பாதை மற்றும் அவரவர் நாணயங்களில் ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை அமெரிக்காவின் பிடியைத் தளரச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதையில் விநியோகம் செய்வதற் கான உடன்பாடுகள் ஏற்கனவே கையெழுத் தாகியுள்ளன. புதிய உடன்பாடுகளும் உருவா கின்றன. தங்கள் எரிபொருளுக்கு அமெரிக்க டாலரில் கொடுப்பதை நிறுத்திவிட்டு, ரூபிளி லும், யுவானிலும் பணம் கொடுக்கும் பணியை சீனா தொடங்கிவிட்டது என்று கேஸ்புரோம் அறி வித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தால் அமெரிக்கா தரும் நெருக்கடியில் இருந்து மீள இதை பெரும் வாய்ப்பாக ரஷ்யா பார்க்கிறது.
இறக்குமதி அதிகரிப்பு
ரஷ்யாவிடம் இருந்து சீனா இறக்குமதி செய்யும் திரவ இயற்கை எரிவாயுவின் அளவு 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 239 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சீனாவின் இறக்குமதி இருந்திருக்கிறது. அதே வேளை யில் கத்தாரில் இருந்து மேற்கொள்ளப்படும் திரவ இயற்கை எரிவாயுவின் இறக்குமதி அளவும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த இறக்குமதி 66.7 விழுக்காடு அளவுக்கு கூடியிருக்கிறது.