world

img

கியூபாவில் குவிகிறார்கள் சுற்றுலாப் பயணிகள்

ஹவானா, மே 26- கடந்த நான்கு மாதங்களில் 12 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வெளிநாடுகளில் இருந்து கியூபாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. கொரோனா பாதிப்பால் கடும் நெருக்க டிக்கு உள்ளான கியூபாவின் சுற்றுலாத் துறை கடந்த ஆண்டில் ஏராளமான பயணி கள் வருகையால் மீண்டெழுந்தது. நடப்பாண்டில் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். இந்த ஏற்பாடு களால் சுமார் 35 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கியூபாவுக்கு வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. கொரோனாவுக்கு முன்பு, ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் பேர் வருகை தந்த னர். அந்த அளவை மீண்டும் எட்ட முயற்சிக் கிறோம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. சிறப்பு ஏற்பாடுகள் பலன் அளித்துள் ளது என்பதை முதல் நான்கு மாதங்களில் 12 லட்சம் பேர் வந்திருப்பது காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங் களை விட இந்த எண்ணிக்கை 190 விழுக்காடு அதிகமாகும். வழக்கம் போலவே, கனடாவில் இருந்துதான் அதிக  எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணி கள் வந்திருக்கிறார்கள். அங்கிருந்து 4 லட்சத்து 95 ஆயிரம் பேரும், அமெரிக்கா வில் இருந்து 54 ஆயிரம் பேரும், ரஷ்யா வில் இருந்து 44 ஆயிரம் பேரும் நடப்பாண்டில் வந்துள்ளனர். தற்போது வந்த எண்ணிக்கையை விடக்கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வந்திருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூவான் கார்லோஸ் கார்சியா, “எரிபொருள் விலை மற்றும் எங்கள் நாடு மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் ஆகியவை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து கியூபாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.