world

img

ஐரோப்பா புயலால் பாதிப்பு: 12 பேர் பலி

ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து ஜெர்மனிக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் வீசிய பலத்தக் காற்றினால் மரம் சாய்ந்ததில் 4 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

புயலினால் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில், இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், புயலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சுற்றுலாவிற்காக வருகை புரிந்தவர்கள் என கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் பல நாடுகளும் புயலின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

;