ஏமன்,டிசம்பர்.19- ஏமன் மீது இஸ்ரேல் ராணுவ குண்டு வீச்சில் 9 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் ஏமனில் குண்டுவீசி 9 நபர்களை படுகொலை செய்துள்ளது. இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலின் ஜஃபா நகரில் அமைந்துள்ள இரண்டு ராணுவத்தலங்களை நோக்கி சக்தி வாய்ந்த இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியது. இதனை தொடர்ந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.