world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேல் அமைச்சருக்கு  எழும் கண்டனங்கள் 

இஸ்ரேலின் அதிதீவிர வலதுசாரியும் நிதி அமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச்சின், பாலஸ்தீனர்கள் பட்டினி கிடப்பது நியாயமானது என்று இனப் படுகொலையை நியாயப்படுத்தி பேசி யுள்ளார். இந்த கருத்துக்கு ஜெர்மனி, பிரான்ஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கண்ட னம் தெரிவித்துள்ளன.  இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத  மூர்க்கத்தனமான பேச்சு என பல நாடுகளும் கண்டித்து வருகின்றன.

கமலா ஹாரிஸுடன் விவாதத்திற்கு  தயாரானார் டிரம்ப் 

ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதம் நடத்த தயாராக உள்ள தாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  செப் டம்பர் 10 ஆம் தேதி ஜனாதிபதி விவாதத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்ப்பும் பைடனும் கடந்த  விவாதத்தில் அமெரிக்க மக்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளை  குறித்து விவாதிக்காமல் தனிநபர் தாக்கு தல்களையே பிரதான விவாதமாக  மாற்றியது குறிப்பிடத்தக்கது.

மதுரோ அரசுக்கு  அறிவுஜீவிகள் ஆதரவு

மதுரோ அரசுக்கு அறிவுஜீவிகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையா ளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள் அதிதீவிர வலதுசாரிகளின் பாசிச சதியை நிராகரித்து  ஜனாதிபதி நிக்கோலஸ் மது ரோவின் தேர்தல் வெற்றியை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளனர்.  வெனிசுலாவில் கலவரத்தை உருவாக்க மதுரோவின் வெற்றிக்கு எதிராக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையால்  சுமார் 10 கோடி பேர் பாதிப்பு

ஜூலை மாதம் பதிவான அதிக வெப்பத்தால் உலகம் முழுவதும் சுமார் பத்து கோடி மக்கள் பாதித்ததாக உலக வானிலை அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மத்திய தரை கடல், பால்கன் தீபகற்பத்தின் பகுதி களில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்த வெப்ப அலையினால், மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், தீவிரமாகும் காலநிலை மாற்ற பிரச்சனைகள் வளரும் நாடுகளையும், ஏழை நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சுயேச்சையாக போட்டியிடும்  ரணில் விக்ரமசிங்கே

இலங்கை ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்ரமசிங்கே சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த தடையும் இன்றி ஜனாதிபதித் தேர்தல் நடத் தப்படும் என்றும்  அத்தேர்தலில்  ரணில் விக்ரம சிங்கே  சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார் என்றும் அவரது உதவியாளர் தெரி வித்துள்ளார். மேலும் அவரது கட்சியில் வேறு யாரும் போட்டியிடப்போவதில்லை எனவும் அவரது கட்சி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.