world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சீனா மொழி கற்றல் அதிகரிப்பு 

பாகிஸ்தானில் சீன மொழி கற்கும் மக்களின் எண்ணிக்கை அதி கரிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். மேலும் சீன மொழி பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடை யது; சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலக கவனத்தை பெற்றுள்ளது; சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலக் கட்டுமானத்துடன், இரு நாடுகளின் பொருளாதார மற்றும்  பண்பாட்டு உறவு  வேகமாக  வளர்ச்சி யடைந்து வருகிறது என்றார்.

சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமில்லா விசா சேவை

இலங்கையின் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைச்சகம் ஏப்ரல் 20    அன்று  வெளியிட்ட அறிக்கையில், இலங்கை க்கு கப்பல் மூலம்  வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் விசா முறையை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏப்ரல் 30 வரை விசாவுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூறப் பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போராட்டம்

இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்க  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் வசமுள்ள பணயக்கைதிகளை மீட்க தற்போது வரை நேதன்யாகு அரசு  ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வில்லை என மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் சீனா செல்லும் பிளிங்க்கன்

அமெரிக்க வெளியுறவுத்துறை செய லாளர் ஆண்டனி பிளிங்க்கன் இம்மாதம் 24 முதல் 26 வரை மூன்று நாள்  பயணமாக சீனா செல்லவுள்ளார். இந்த பய ணம்  ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் ஆகிய இருநாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையே யான தொலைபேசி அழைப்புகளுக்கு பிறகு உறுதியாகியுள்ளது. இந்த சந்திப்பில் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியம் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. 

‘சுற்றுலாப் பயணிகள்  வருகையை கட்டுப்படுத்த வேண்டும்’

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில்  சுற்றுலாப் பயணிகளின் வருகையை தற்காலிகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று  ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்த விடு முறை, அதிக வாடகை மற்றும் புதிய ஹோட்டல் கட்டுமானங்களால்  உள்ளூர் மக்க ளின் வீட்டுச் செலவவினங்கள் அதிகரிக் கின்றன என்று  அம்மக்கள் குற்றம் சுமத்தி யுள்ளனர்.  சுற்றுலாத் துறையில் மாற்றங் களைச் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.