world

உலகைச் சுற்றி

ஜோ பைடன் மீது வழக்கு!

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பாலஸ்தீன இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதாக கூறி,  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டீன் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி லிங்கன் ஆகியோர் மீது பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகள், காசாவிலும், அமெரிக்காவிலும் உள்ள பாலஸ்தீனர்கள் அமெரிக்க ஒன்றிய அரசின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன . சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு ---பாலஸ்தீனம் எதிர் பைடன் வழக்கு, ஜனவரி 26 இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது . காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் யுத்தத் திற்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு ,ஆயுத சப்ளை, சியோனிஸ்ட் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு ஆகியவற்றை தடுத்திட நீதிமன்றம் அவசர உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வாதிகள் வாதிட்டனர்.

இவ்வழக்கை தொடுத்தவர்களில், மேற்கு கரையின் ரமல்லா நகரில் செயல்படும் சுயேச்சையான பாலஸ்தீன மனித உரிமை அமைப்பும் உள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர்களை இஸ்ரேலின் தாக்குதலில் இழந்த, காசா பகுதி பாலஸ்தீனர்களும் வழக்கில் வாதிகளாக உள்ளனர். வாதிகள் தரப்பில் வழக்கை ,அரசியல் சட்ட உரிமைகளுக்கான மையத்தின் சார்பில், வான் டெர் ஹௌட் என்ற சட்ட கம்பெனி தாக்கல் செய்தது. இஸ்ரே லுக்கு, அமெரிக்கா ஆயுத சப்ளை செய்வதை எதிர்த்து, ராஜினாமா செய்த, அமெரிக்க அரசின் உயர் அதிகாரி, ஜோஸ் பால் மற்றும் இனப்படுகொலை குறித்த சர்வதேச நிபுணர் வில்லியம் ஷபாஷ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு  நடுநிலையோடு நீதியை எடுத்துக் கூறினர்.

பாலஸ்தீனர் வெகுவாக , நீண்ட காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் . கடந்த காலங்களில், இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னர், வழக்குகளாக நீதிமன்ற பார்வைக்கு வருவது போல் இல்லாமல், இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, நீதிமன்றத்திற்கு வழக்காக வந்துள்ளது என இனப்படுகொலை மற்றும் பெரு இன அழிப்பு குறித்த அறிஞர் டாக்டர் பேரி டிராக்டர்டென்பெர்க் சாட்சியளித்தார்.

மாலி, புர்கினோ பாஸோ, நைஜர்!
ஈகோவாஸ், மேற்கு ஆப்பிரிக்க  நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பில் 15 ஆப்பிரிக்க நாடு கள் உறுப்பினர்களாக உள்ளன.

அட்லாண்டிக் கடலின் கிழக்கே, வடக்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள மிக வறட்சி பிரதேசமான சஹாரா பாலைவனத்திற்கும், முல்லை நில காடுகளுக்கும் இடை யே உள்ள பிரதேசம் சாஹெல் என  அழைக்கப்படுகிறது. செனகல், காம்பியா, மவுரிடேனியா, கினியா,  மாலி, புர்கினோ பாஸோ,  நைஜர், சாட், கேமரூன், நைஜீரியா ஆகிய 10 நாடுகள் சாஹெல் பிராந்தியத்தில் உள்ளன.

ஈகோவாஸ், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஏஜெண் டாக செயல்படுவதால், மாலி, புர்கி னோ பாஸோ, நைஜர் ஆகிய மூன்று நாடுகள் அமைப்பில் இருந்து விலகிக் கொண்டன. ஜனவரி 28 இல் தொலைக்காட்சி மூலம் மூன்று நாடுகளும் இதை அறிவித்தன. ஈகோ வாஸ் சட்ட விரோதமாக, மனிதாபி மானமற்ற, பொறுப்பற்ற முறையில், பொருளாதாரத் தடைகளை விதிப்ப தால், மூன்று நாடுகள் அமைப்பி லிருந்து வெளியேறின.

இந்த மூன்று நாடுகள் 2023 செப் டம்பர் 16இல் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.  சாஹெல் நாடுகளின் கூட்டணி என்ற அமைப்பையும் உருவாக்கின.

பிரிட்டனில் வேலை நிறுத்த தடைச் சட்டம்!
ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டனின் பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி அரசு, 2023 -லேயே தொழிற்சங்க விரோத, வேலை நிறுத்த தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. 2023 டிசம்பர் துவக்கத்தில் பிரிட்டனின் டிரேட் யூனியன் காங்கிரஸ் சிறப்பு மாநாட்டை நடத்தியது. அதில் வேலை நிறுத்தத்திற்கு எதிரான சட்டத்தை முறியடிக்க போராடுவது என தீர்மானிக்கப்பட்டது.

2023 ஜனவரி 10இல், பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய குறைந்தபட்ச சேவை மட்ட மசோதா அறிமுகப்படுத்தியது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வேலை நிறுத்த காலத்தில், சுகாதாரம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட 8 பிரதான துறைகளில், குறைந்தபட்ச சேவையை, தொழிலாளர்கள் வருகையை உறுதிப்படுத்த நிர்பந்திக்கும் சட்டமாகும். 

ஒத்துழைக்க மறுக்கும் தொழிலாளரை, நிர்வாகம் பணி நீக்கம் செய்யலாம்; தொழிற்சங்கங்கள் அபராதம் செலுத்த நேரிடும். தொழிற்சங்கங்கள் மற்றும் முற்போக்கு பிரிவினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மசோதா சட்டமாக 2023 ஜூலை 20 இல் நிறைவேறியது. இந்தச் சட்டம் ஒரு பகுதி துறைகளில், டிசம்பர் 8-இல் அமலாக்கப்பட்டது.

2024 ஜனவரி 27 இல் வேலை நிறுத்த எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக,  கிளவ்செஸ்டெர்சைர் மாநிலத்தில்,  செல்டென்கேம் என்ற நகரில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

பிரிட்டனின் டிரேட் யூனியன் காங்கிரஸ் மற்றும் தீயணைப்பாளர் சங்கம், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி சங்கம்,பொது மற்றும் வணிக சேவை சங்கம், ரயில், கடல் மற்றும் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் உள்பட பல சங்கங்கள் பேரணியில் பங்கேற்றன.

இந்தப் பேரணியில் பங்கேற்றோர், இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து பாலஸ்தீனர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தனர்.

பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் வீரர்களும் பேரணியில் பங்கேற்றனர். வேலை நிறுத்த உரிமையை காத்திட வெகுஜன இயக்கம் தேவை என பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இஸ்ரேலின் இன அழிப்பு யுத்தம்!
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து ஜனவரி 31-இல் 116 ஆவது நாள். இதுவரை 27 ஆயிரம் பாலஸ்தீனர் படுகொலை செய்யப்பட்டனர்; 65,636 பேர் காயமுற்ற னர். கடந்த 24 மணி நேரத்தில் காசா நகரம், அகதிகள் முகாம், கான்  யூனிஸ் நகரம் மற்றும் சில இடங்களில் இஸ்ரேல் வான்வெளித்  தாக்கு தலையும், தரைவழி தாக்குதலையும் நடத்தியது. இப்பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள், குடியிருப்பு பகுதிகள், சில மருத்துவமனைகள், கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீன செம்பிறை சமூக தலைமை அலுவலகம் உட்பட தாக்கப்பட்டன. காசா நகரில் உள்ள ஐநா அகதிகள் நிவாரண முகாம் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கு தங்கி இருந்த பல பாலஸ்தீனர்க ளை கைதும் செய்தனர்

. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஜனவரி 30இல் பாலஸ்தீன ஆணையம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இஸ்ரேல் சிப்பாய்கள் டாக்டராக, நர்சாக வேடமிட்டு வந்து, மூன்று பாலஸ்தீனர்களை படுகொலை செய்த காட்சி வருகிறது. இஸ்ரேல் ஆக்கிர மித்துள்ள, ஹமாஸ் அமைப்பு இல்லாத, மேற்கு கரையிலும் பல நகரங்கள் மீது இஸ்ரேலின் படைகள் தாக்குதல் நடத்தின. அமெரிக்கா மற்றும் வேறு பல மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீன அகதிக ளுக்கான ஐநா நிவாரணம் மற்றும் பணிகள் ஏஜென்சிக்கு உதவி நிதியை நிறுத்திவிட்டன.

ஏஜென்சிக்கு ஆதரவாக பல மனித உரிமை குழுக்கள், உதவி ஏஜென்சிகள் கூட்டாக அறிக்கை விடுத்தன. ஆக்சன்எய்ட், ஆக்ஸ்பாம், குழந்தைகளை காப்போம் உள்பட 21 குழுக்கள் கையெழுத் திட்டு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு:- ‘ஐநா அகதிகள் நிவாரணம் மற்றும் பணிகள் ஏஜென்சி நிதி வெட்டு; காசா மற்றும் பாலஸ்தீன பிராந்தி யத்தில் உள்ளோருக்கு மரண தண்டனை’.

2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீரென நடத்திய தாக்குதலுக்கு, ஐநா நிவாரண ஏஜென்சியை சார்ந்த சிலர் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தி, மேற்கத்திய நாடுகள் நிவாரண உதவி நிதியை நிறுத்தின.

காசாவை காலனியாக்கும் மாநாடு!
‘இஸ்ரேலின் வெற்றிக்கான மாநாடு’ இஸ்ரே லின் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெருசலேமில் ஜனவரி 28-இல் நடைபெற்றது. இஸ்ரேலின் 12 அமைச்சர்கள் உட்பட 27 இஸ்ரேலிய சட்டம் உரு வாக்கும் அதிகாரிகள் பங்கேற்றனர் .மாநாட்டில் ஆயிரக்க ணக்கான சியோனிச காலனி குடியேறிகள், யூத மத குருக்கள் மற்றும் குடியேறிகளில் உள்ள முன்னணியினர், காசாவின் யூதர்கள் மட்டும் வசிக்கும் குடியிருப்புகளை உருவாக்கும் அறைகூவலை விடுத்தனர். குறைந்தது 7 லட்சம் இஸ்ரேலியர் சட்டவிரோத காலனி ஆதிக்க குடியிருப்புகளில், மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில், வசித்து வருகின்றனர். இஸ்ரே லிய குடியேறிகள், ஆயுதங்களுடன் உள்ளனர். மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களை கொல்ல இந்த ஆயுதங்க ளை பயன்படுத்துகின்றனர். இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ காசா வை ஆக்கிரமிக்கும் திட்டம்  இஸ்ரேலிடம் இல்லை என மறுத்து வருகிறார். ஆனால் அவரது அமைச்சர்களோ காசாவை காலனி ஆக்கும் மாநாட்டில் பங்கேற்றனர்.