கெய்ரோ,பிப்.20- செங்கடலில் நிலவும் பதற்றங்களின் காரண மாக சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்கு வரத்து குறைந்துள்ளது . இதனால் சூயஸ் கால்வாய் வருமானத்தில் 40-50 சதவீதம் வரை சரிந்து விட்டதாக எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டின் பொருளாதாரத்தில் சூயஸ் கால்வாய் 100 கோடி டாலர்கள் வரை பங்க ளிக்கிறது. இதன் வருவாய் தற்போது 50 சத விகிதம் வரை குறைந்துள்ளதால் பெரும் பொரு ளாதார நெருக்கடி உருவாகியுள்ளது என ஆற்றல் கண்காட்சி திறப்பு நிகழ்ச்சியில் ஜனாதி பதி அப்தெல் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் அந்நியச் செலாவணியில் சூயஸ் கால்வாய் வருமானம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்த வருமான வீழ்ச்சியால் அந்நியச் செலாவணியை சமாளிப்பதில் அந்நாட்டிற்கு சவால் எழுந்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்தாததால் அந்நாட்டுடன் தொடர்புடைய அனைத்து வணிகக் கப்பல்கள் மீதும் ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தி வரு கிறது.இதனை தொடர்ந்து அமெரிக்கா தலை மையிலான கூட்டு கடற்படை ஹவுதி மீது கடும் தாக்குதல்களை கட்டவிழ்த்துள்ளது.
இதனால் செங்கடலில் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பல வணிகக் கப்பல் நிறு வனங்கள் செங்கடல் வழியான பயணத்தை தவிர்த்துள்ளன.இதனால் சர்வதேச நீர்வழிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சூயஸ் கால்வாய் போக்குவரத்தின்றி வெறிச்சோடி உள்ளது. வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐ.நா.அமைப்பு கொடுத்துள்ள தகவலின்படி சூயஸ் கால்வாய் வழியான போக்குவரத்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 42 சதவீதம் வரை குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இது மட்டும் இன்றி காசா, லிபியா, சூடான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நெருக்கடி ஆகிய வற்றின் காரணமாக எகிப்து பெரும் சவால் களை எதிர்கொண்டு வருகிறது என எகிப்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சூயஸ் கால்வாயில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8,040 கோடி வசூல் ஆகியுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4,280 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. அதாவது 46 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ரபீ தெரி வித்துள்ளார். இந்த வருமான வீழ்ச்சியால் பணவீக்கம், உள்நாட்டு பண மதிப்பின் சரிவு, வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறை மற்றும் அதிக இறக்குமதி ஆகியவற்றால் எகிப்தின் வரலாற் றில் மிக மோசமான பொருளாதார நெருக்க டியை சந்தித்து வருகிறது.