world

தீக்கதிர் உலக செய்திகள்

சூடான் துணை ராணுவம்  பெண்களுக்கு எதிராக வன்முறை

சூடானின் அதிவிரைவுப்படை பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு, கும்பல்  பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடு வதாக சர்வதேச உரிமைகள் குழு குற்றம் சாட்டியுள்ளது. சூடானில் அந்நாட்டு ராணு வத்திற்கும் அதிவிரைவுப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டியின் காரணமாக உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.  15 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரால் பொது மக்களின் மீதான வன்முறையாக அதிகரித்துள்ளது.

காசாவில் 10,000 மாணவர்கள்; 400 ஆசிரியர்கள் படுகொலை

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால் காசா  பகுதியில்   சுமார் 10 ஆயிரம்  மாண வர்கள், 400 ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசா பகுதிக்கான பாலஸ்தீன கல்வி அமைச்சகம் நடத்திய செய்தி யாளர் சந்திப்பில் இந்த தகவலை தெரி வித்துள்ளது. சர்வதேசச் சட்டங்களை மீறி காசாவில் பள்ளிக்கூடங்கள் மீதும் மாணவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இது பாலஸ்தீன சமூகத்தின்  வளர்ச்சிக்கான அடித்தளத்தை முற்றிலுமாகச்  சிதைத்து விட்டது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லெபனான் தலைநகரில்  விமானங்கள் ரத்து

இஸ்ரேலுக்கும்  ஹிஸ்புல்லா அமைப் பிற்கும் இடையேயான  போர்ப் பதற்றம் தீவிர மடைந்ததை தொடர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  எட்டு மாதங்களுக்கு மேலாகவே இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் ஆக்கிர மிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் தாக்குதல் நடந்த பிறகு இந்த போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அதிக வெப்பத்தால் அழியும்  இயற்கை வளங்கள்

அதிக வெப்பத்தால் மனிதர்கள் சார்ந்து இருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தும் விரைவாக அழிந்துவிடும் என  விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை முதல் உலக  வெப்பநிலை தொடர்ந்து 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருக்கிறது. வெப்பமய மாதலின் ‘மோசமான விளைவுகளை’ உலகம் தவிர்க்க வேண்டும் என்றால் அதிகரிக்கும் வெப்ப நிலையை குறுகிய காலத்தில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

‘ஆசியான்’ அமைப்பு  இஸ்ரேலுக்கு கண்டனம் 

காசாவில் இஸ்ரேல் நடத்தும் மிருகத்தன மான இனப்படுகொலை தாக்குத லுக்கு ஆசியான் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது. லாவோஸ் தலைநகரில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் காசாவில் உரு வாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து கவலை  தெரிவித்துள்ளனர்.மேலும் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி பாலஸ்தீனர்கள்  மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் நடத்தும் தாக்கு தலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அமைதியை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஐ.நா அழைப்பு

நியூயார்க்,ஜூலை 29- உலகில் அமைதியை நிலை நாட்டுவது அவசியமானது. அமைதியை நிலைநாட்ட நாம்  அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என  ஐ.நா.  அவை  துணைப் பொதுச் செய லாளர்  ஆலிஸ் வைரிமு  அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது: மிகவும் அமைதியான உலகத்தை உரு வாக்குவதற்கான பொறுப்பு என்பது நம் அனைவருக்குமே உண்டான கடமை. அமைதியை நிலைநாட்டுவதற்கு தொடர் உரையாடல்கள், வழிமுறைக ளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.  உலகில் நீண்ட கால அமைதியை உரு வாக்க நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்வோம். அதில் இருந்து நாம் கற்றுக் கொள்வோம்.

உலகில் நிரந்தர சமாதா னத்தை அடைவதற்கும், இனப் படுகொலை தொடர்பான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதி ரான குற்றங்களைத் தவிர்ப்ப தற்குமான முயற்சிகளும் முக்கியமானது. அத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டி யது இந்த முயற்சிகளின் ஒரு  பகுதியாகும் எனவும்  பேசி யுள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

பெய்ரூட்,ஜூலை 29- தெற்கு லெபனானில் இஸ்ரேல்  போர் விமானம்  நடத் திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட  5 பொது மக்கள் படுகாயமடைந்தனர். மேலும்  மக்களின் வீடுகளும் உடமைகளும் பலத்த சேத மடைந்துள்ளன.  

இஸ்ரேலால் ஆக்கிர மிக்கப்பட்ட கோலன் குன்று களில் இரு தினங்களுக்கு முன் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாகினர்.இதனை தொ டர்ந்து இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மற்றும் போர் விமா னங்கள்  மூலம்  தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.  

மேலும் லெபனானின் சப்ரிஹா, புர்ஜ் அல்-ஷெமாலி, பெக்கா, கஃபர்கே லா, ரப் எல் தலதைன், கியாம் மற்றும் தைர் ஹர்ஃபா ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஹிஸ் புல்லா அமைப்பின் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

எனினும் ஆக்கிரமிக்கப் பட்ட கோலன் குன்றுகளைத் தாக்கிய குற்றச்சாட்டை ஹிஸ் புல்லா அமைப்பு மறுத்துள் ளது. 

இந்த தாக்குதல்களை தொடர்ந்து லெபனானுக்கான ஐ.நா. அவையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் அமைதியை நிலைநாட்ட  மீண்டும் அழைப்பு விடுத்துள் ளார். இரு நாடுகளும் அமைதி யை கடை பிடிக்க வேண்டும். மீண்டும் ஒரு போர் வெடித் தால் அது மத்திய கிழக்கு பகுதி களில் மிகப்பெரிய அழிவை உருவாக்கி விடும் என எச்ச ரித்துள்ளார்.