‘பாலஸ்தீன அகதிகளுக்கு ஸ்பெயின் உதவும்’
பாலஸ்தீன அகதி களுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை ஸ்பெ யின் தொடரும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அறி வித்துள்ளார்.இஸ்ரேல் இனப்படுகொலை வழக்கில் சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை தொடர்ந்து அமெரிக்கா,இஸ்ரேல் கூட்டணி நாடுகள் ஐ.நா அகதிகள் நிறுவனத்தை பழிவாங்கும் வகையில் நிதி உதவியை வெட்டி வருகின்றன.
அமெ.வில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2022 ஆண் டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 6,53,104 மக்கள் வீடற்றவர்க ளாக மாறியுள்ளனர். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளால் பலர் தெருக்களுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.வீடற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூர்மையாக அதிகரித்து வருவதை அமெரிக்காவின் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை புள்ளி விவ ரங்களே காட்டுகிறது. கடந்த ஆண்டு, 5,82,462 அமெ ரிக்கர்கள் வீடற்றவர்களாக இருந்துள்ளனர்.
காசாவை ஆக்கிரமிப்போம்: இஸ்ரேல் வெறிக் கூச்சல்
போர் முடிவடை ந்த பிறகு காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிர மிக்கும் என அந்நாட்டு பாது காப்புத்துறை அமைச்சர் கெலாட் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்ராணுவ நடவடிக்கைகள் மற்றும் படுகொலைகள் செய்ய தமது ராணு வத்திற்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார். மேலும் காசாவின் மீதான தங்களது ஆக்கிரமிப்பு சாதாரண ஆக்கிரமிப்பாக இருக்காது எனவும் மிரட்டியுள்ளார்.