சிரியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் : எர்டோகன்
சிரியாவை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளவர்களை மீண்டும் சிரியாவிற்கு அனுப்ப வேண்டும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் பேசியுள்ளார். மேலும் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம், அண்டை நாடுகள், துருக்கியின் நட்பு நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்; சிரியாவில் அம்மக்களை குடியேற்ற உதவ வேண்டும் என பேசியுள்ளார். துருக்கியில் மட்டும் சுமார் 30 லட்சம் சிரியர்கள் அகதிகளாக உள்ளனர்.சிரியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு பயங்கரவாதிகளுக்கு துருக்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் அமைதியை கொண்டுவர நாங்கள் உதவத் தயார் : சீனா
சிரியாவில் அல் அசாத் ஆட்சியை பயங்கர வாதிகள் கவிழ்த்துள்ள நிலையில் அங்கு அமைதியை கொண்டுவர தாங்கள் தயாராக இருப் பதாக சீனா தெரிவித்துள்ளது. சிரியாவின் நிலை மை கடுமையான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, அதில் சீனா அதிக கவனம் செலுத்துகிறது.சிரியா விரை வில் அமைதியை அடைந்து உறுதித்தன்மையை மீட்டெடுக்கும் என்று ஐ.நா அவைக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி கெங் ஷுவாங்பேசியுள் ளார். சிரியாவின் பாதுகாப்பு நிலைமையைஉறுதிப் படுத்த வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் பயணம் மீண்டும் தாமதமாகிறது
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண் வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோரின் மீட்புப் பணி மீண்டும் சிக்கலை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் 2025 பிப்ரவரி மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர்களை கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீட்புப் பணிக்கான வேலைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தால் பிப்ரவரி மாதம் முடிக்க முடியாது எனவும் மார்ச் மாதம் வரை இப்பணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் : டிரம்ப் மிரட்டல்
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்தால், இந்தியப் பொருட்களுக்கும் அதே அளவுக்கு வரி விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்தியாவின் இறக்குமதி வரிக் கொள்கை பற்றியும் விமர்சித்துள்ளார். மேலும் அவர் விமர்சிக்கும் போது எனக்கு ‘பரஸ்பரம்’ என்ற சொல் முக்கியமானது. இணைத்து செயல்படுவது முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா மட்டும் இன்றி சீனா, பிரேசில், கனடா, மெக்ஸிகோ நாடுகளுடன் நடைபெறும் வர்த்தக முரண்பாடுகள் பற்றி பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
வனாட்டு தீவு நிலநடுக்கம் 14 பேர் பலி
பசிபிக் பெருங்கடலில் உள்ள வனாட்டு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியது. நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தரைமட்டமாகின. நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.