world

தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

தென் கொரிய அரசு 2025 ஆம் ஆண்டு முதல் மருத்துவ மாண வர்களுக்கான இடங்களை அதிகப்படுத்த இருப்பதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  சுமார் 8,000 பயிற்சி  மருத்துவர்கள் அந்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

ஒரு நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதிகரிப்பது ஆரோக்கியமான செயலாக இருந்தாலும் தற்போது சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்ச னைகளை தீர்ப்பதற்கு மாறாக மருத்துவர்களின் எண்ணிக்கையை கூட்டுவது பிரச்சனைகளை தீர்க்க உதவாது என தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் பெரும்பான்மை வேலை களை கவனித்து வந்த பயிற்சி மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்ததால் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவச் சேவைகளும் அவசர கால மருத்துவப் பிரிவுகளும் ஸ்தம்பித் தன. போராட்டம் துவங்கிய பிறகு, பணிக்குத் திரும்ப அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் மருத்துவர்கள் கொடுத்த  ராஜினாமா கடிதங்களை புறக்கணிக்குமாறு மருத்துவ மனை நிர்வாகங்களுக்கு அரசாங்கம் அறி வுறுத்தியுள்ளது.

மருத்துவர்- நோயாளி விகிதம் மிக மோச மாக உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி  1,000 நோயாளிகளுக்கு 2.6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.     மருத்துவப் படிப்பு இடங்களை அதிகப்படுத்து வது தற்போது தேவையற்றது. அதற்கு மாறாக தற்போதுள்ள மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.அவர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என கொரிய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.  சமீபத்தில் அந்நாட்டில் இது குறித்து எடுக்கப்பட்ட  கருத்துக் கணிப்பில்  மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்க அதிக ஆதரவு கிடைத்துள்ளது.  கொரிய சுகாதார மற்றும் மருத்து வப் பணியாளர்கள் சங்கமும் இதனை வர வேற்றது.

தற்போதைய போராட்டத்திற்கு மிக முக்கிய காரணம் நாட்டின் கிராமப்பகுதிகள் உட்பட பல இடங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை.இதனால் தற்போது பணியில் உள்ள மருத்துவர்கள் குறிப்பாக பயிற்சி மருத்து வர் கடுமையான பணிச்சுமைகளை எதிர் கொண்டு வருகிறார்கள். பல இடங்களில் மருத்து வர்களின் பணியை செவிலியர்கள் பார்க்கும் சூழல் உள்ளது.  அவர்களுக்கான ஊதியமும் கொடுக்கப்படு வதில்லை. இதனால் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்து வது என்பது அவர்களின் வாழ்க்கைச் சூழல் பணிச்சூழல் ஆகியவற்றையும் இணைந்து உயர்த்தும் வகையில் அமைய வேண்டும். இல்லை என்றால் அதில் மீண்டும் பணிச்சுமை களும் சுரண்டல்களும் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென் கொரியாவின் சுகாதார அமைப்பு பெரு மளவில் தனியார் துறையை சார்ந்துள்ளது.

மேலும் அவர்கள் அமல்படுத்தி வரும்  நவீன தாராளமயக் கொள்கையின் காரணமாக நாடு முழுவதும் மருத்துவத்துறை வணிகத்துறை யாக மாறி விட்டது.  இந்நிலையில் மருத்துவர்களின் எண் ணிக்கை அதிகரிப்பு வணிக நோக்கம் கொண்ட தாக மட்டுமே அமையும். சேவை நோக்கம் அதில் இருக்காது என  போராட்டக்காரர்கள் தெரி வித்துள்ளனர்.