world

img

சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலப் போராட்டத்திற்கு வெற்றி

சாண்டியாகோ,டிச.18- அகஸ்டோ பினோசெட்டின்  சர்வாதிகார ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பழமைவாத அரசியலமைப்பை நீக்குவதற்கு ஆதரவாக சிலி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தச்  சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவாக மக்கள் வாக்க ளித்து இருப்பது சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

பழமைவாத சட்டத்தை நீக்குவதற்கு கருத்துக் கேட்டு மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 55 சதவீதத்தி ற்கும் அதிகமானோர் அரசியல் அமைப்புச் சட்டத்தை  நீக்க ஆதரவாகவும்,  44 சதவீத மக்கள்  எதிராகவும்  வாக்க ளித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளும் நாட்டு மக்கள் சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.எனவே அதை மாற்றுவதற்கான பணியிலும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.  

அமெரிக்காவின் உதவியுடன் இராணுவம் மூலம் சால்வடார் அலெண்டே தலைமையிலான கம்யூனிஸ்டுக ளின் ஆட்சியை கவிழ்த்து,  சிலியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி  சர்வாதிகாரியாக அமர்ந்த பினோசெட் ஆட்சி யின் போது உருவாக்கப்பட்ட பழமைவாத அரசியல மைப்பை மாற்றுவதற்கான  போராட்டம் பல ஆண்டுக ளாக நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு 10 லட்சம் மக்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட பேரணியுடன் பெரும் போராட்டம்  நடைபெற்றது. 

பழமைவாத அரசியலமைப்பு சட்டம் பாரபட்சம் மிகுந்த சொத்து உரிமைகள் ,கார்ப்பரேட்டுகள் தடையின்றி கொள்ளையடிக்கும் வகையிலான   தடையற்ற சந்தைக் கொள்கைகளை வலுப்படுத்தியது. பெண்களின் உரிமை களை பறித்தது. கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்து பல கெடுபிடிகளை கடைப்பிடித்தது.

இந்நிலையில் சிலியை ஒரு பன்முகத்தன்மை கொண்ட , தன்னாட்சி பெற்ற நாடாக நிலைநாட்டவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவத்தையும் உயர்த்திப்  பிடிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட முற்போக் கான அரசியலமைப்புச் சட்டம், இடதுசாரிகளின் நீண்ட பிரச்சாரத்திற்குப் பிறகு தற்போது மக்கள் ஆதர வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வாக்கெடுப்புக்கு முன், சிலியின் இடதுசாரி ஜனாதி பதியான கேப்ரியல் போரிக்,நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் அரசியலமைப்பு மாற்றத்தி ற்கு  உறுதியளித்தார்.மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்க ளித்து விட்டு வந்த அவர் “நாட்டிற்கு நாம் அனைவரும் தேவை. அனைவருக்குமான  வளர்ச்சி, சமூக நீதி மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு என நம் நாட்டிற்கான ஒரு புதிய சகாப்தத்தை நாம் ஒன்றிணைந்து கட்டமைக்க உங்களை அழைக்கிறேன்”  என நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்தார். 

லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே சிலி மிகவும் வளமிக்க நாடுகளில் ஒன்றாக இருப்பி னும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சமத்துவ மின்மையில் மோசமான நிலையில் உள்ளது. வலதுசாரி களின் சர்வாதிகார ஆட்சியாலும் அவர்களின் கார்ப்பரேட் நலக் கொள்கைகளாலும் நாட்டின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டிவிட்டன.

அவர்கள் மேற்கொண்ட அத்தனை சுரண்டல்களையும் இந்த பழமைவாதச்  சட்டங்கள்   பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.