‘எங்களுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இல்லை’
செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் தங்களது பாது காப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தங்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவிக் கின்றன.ஆட்டோமேட்டிக் ஐடென்டிபிகே ஷன் சிஸ்டம் மூலம் ஹவுதிகள் கப்பல்க ளின் விவரங்களை அறியும்சூழலில், பல கப்பல்கள் இந்த தானியங்கி அமைப்பை, செங்கடலுக் குள் செல்லும் வேளையில் அணைத்து விடுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்கும் சீனா
இரண்டாவது ஆண்டாக மக்கள் தொகையை கட்டுக்குள் வைத் துள்ளது சீனா. உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா 2023 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சாதித்து வருகிறது.நாட்டின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 6.39 பிறப்புகள் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது 2023 க்கு முன்பு 6.77 ஆக இருந்தது.இதன் மூலம் இரண்டாவது ஆண்டாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்கிறது.
கனடா : இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
கனடாவில் சீக்கிய பிரிவினை வாதத் தலைவரின் கொலை யை தொடர்ந்து கனடாவில் கல்விக்காக வரும் இந்திய மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து விட்டது.முரண்பாடு கள் உருவான போது கனடா நாட்டின் தூதுவர்களை இந்தியா வெளியேற்றி யது.இதனால் கனடா வரும் இந்திய மாணவர்களுக்கான அனுமதி விசாக்களை முறையாக பரிசீலிக்க இயலாமல் போனதே இதற்கு காரணம் என கனடா குடியேற்ற துறை அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.