இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்
லெபனானின் இறையாண்மையை மீறும் இஸ்ரே லுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், உச்சத்தில் உள்ள போர் பதற்றத்தை தணிக்கவும், பெரிய அளவில் போர் மூள்வதை தவிர்க்கவும் இஸ்ரேல் உட்பட உலக நாடுகள் அனைத்தும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிப்பதாகவும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
லெபனான் மீதான தாக்குதல் இஸ்ரேலுக்கே ஆபத்து : ஜெர்மனி
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேலுக்கு பாதுகாப்பை தராது. மாறாக, அவர்களை அதிக ஆபத்தில் தள்ளும் என ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் குறிப்பிட்டுள் ளார். லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை மதிக்காமல் இஸ்ரேல் லெபனான் மீது மோசமான தாக்குதல் நடத்தியதை யும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேபாள வெள்ளத்தில் பலி 100 ஐ கடந்தது
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் பலியானவர்கள் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள் ளது. 65 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள னர். மூன்று நாட்களாக பெய்த வரலாறு காணாத மழை யால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டில் நிலச்சரிவில் சிக்கிய இரு பேருந்துகளில் இருந்து 14 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. மேலும் தலைநகரில் மட்டும் 49 பேர் பலியாகி யுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வெளுத்துக்கட்டிய மழை
திருநெல்வேலி, செப்.29- கடந்த இரண்டு வாரங் களுக்கும் மேலாக திரு நெல்வேலி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாவட்டம் முழு வதும் 74 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி யுள்ளது.
அதிகபட்சமாக களக்காட்டில் 27 மில்லி மீட்டர் ,பாளையங்கோட்டை யில் 17 மில்லி மீட்டர், திரு நெல்வேலியில் ஏழு மில்லி மீட்டர் மழை பொழிவு பதி வாகியுள்ளது, அம்பா சமுத்திரம் மாஞ்சோலை காக்காச்சி ஊத்து பகுதி யில் ஒரு மில்லி மீட்டரும் நான்குநேரியில் இரண்டு மில்லி மீட்டரும் ராதாபுரம் மற்றும் நம்பியார் அணை பகுதியில் 4 மில்லி மீட்ட ரும் மூலைக்கரை பட்டி யில் ஐந்து மில்லி மீட்டரும் நாலு முக்கு பகுதியில் இரண்டு மில்லி மீட்டரும் கொடுமுடி ஆறு அணைப் பகுதியில் இரண்டு மில்லி மீட்டரும் மழை பொழிவு பதிவாகியுள்ளது.