நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கனடா பிரதமர் வெற்றி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளு மன்றத்தில் அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றார். 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர், 120 பேர் ஆதரித்தனர். ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு அவரது லிபரல் அரசாங்கத்திற்கு இது முதல் பெரிய சோதனையாக இருந்தது. எனினும், முக்கிய எதிர்க்கட்சியான கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி, வரும் நாட்களில் ட்ரூடோவின் அரசாங்கத்தை கவிழ்க்க உறுதி பூண்டுள்ளது.
ஜப்பான் போர்க்கப்பல் முதன்முறையாக தைவான் நீரிணையில் பயணம்
ஜப்பானின் சுய பாதுகாப்புப் படையின் (SDF) போர்க்கப்பல் புதன்கிழமை முதன்முறை யாக தைவான் நீரிணையில் ரோந்து மேற்கொண் டது. சஸனாமி எனும் அக் கப்பல் கிழக்கு சீனக் கடலில் இருந்து நீரிணைக்குள் நுழைந்து, 10 மணி நேரத்திற்கும் மேலாக தெற்கு நோக்கி பய ணித்தது. ஒரு வாரத்திற்கு முன்பு சீன விமானம் தாங்கி கப்பல் ஜப்பானுக்கு அருகில் கடந்து சென்ற தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக தெரிகிறது. ஜப்பானிய அதிகாரிகள் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் இடம் : இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு
புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தார். “ஐநாவை மேலும் திறன்மிக்கதாக மாற்றுவோம். இது மேலும் பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டும், அத னால்தான் பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதை பிரான்ஸ் ஆதரிக்கிறது,” என்று அவர் கூறினார்.
டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்: இடாஹோ நபர் மீது குற்றச்சாட்டு
64 வயதான இடாஹோவை சேர்ந்த ஜோன்ஸ் கிலெஸிபுல், முன்னாள் அமெரிக்க ஜனாதி பதி டொனால்டு டிரம்ப்பை கொலை செய்ய பல முறை மிரட்டியதாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப் பட்டுள்ளார். ஜூலை 31 அன்று டிரம்ப்பின் மார்-அ-லாகோ இல்லத்திற்கு ஒன்பது முறை அழைத்து, “அவரை நேரில் கொல்வேன்” என்று மிரட்டியுள்ளார். இரகசிய சேவை அமைப்பு குரல் பகுப்பாய்வு மற்றும் தொலைபேசி பதிவுகள் மூலம் கிரேஸிபுல்லை அடை யாளம் கண்டது, இது டிரம்ப்பைச் சுற்றியுள்ள தொடர்ச்சி யான பாதுகாப்பு கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.
லெபனானிய பத்திரிகையாளரை தாக்கிய இஸ்ரேலிய ஏவுகணை
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடை யிலான தொடர் மோதலின் போது, ஒரு லெப னானிய பத்திரிகையாளர் நேரலை டிவி நேர் காணலில் ஈடுபட்டிருந்தபோது அவரது வீட்டை ஒரு ஏவுகணை தாக்கியது. இதன் விளைவாக, மிரயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலை மை ஆசிரியரான பாடி பௌடாயா சமநிலையை இழந்து திரைக்கு வெளியே வீசப்பட்டார். இந்த காட்சியில், தாக்குதல் நடந்த நேரத்தில் பௌடாயா பேசிக் கொண்டிருந்தபோது சிக்கியது பதிவாகியுள்ளது.