world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவின்  மிகப்பெரிய போர்ப் பயிற்சி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய போர்ப் பயிற்சியான ‘காகடு 2024’-இல் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை கவனத்தில் கொண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ராயல் ஆஸ்திரேலிய கடற்படை நடத்துகிறது, இதில் விமான, கடல் மற்றும் ஆழ்கடல் போர்த்திறன் செயல்பாடுகள் அடங்கும்.

50 சதவீத மக்களுக்கு சத்துணவு இல்லை

ஹார்வர்டு டி.எச்.சான் பதிவு மற்றும் யுசி சான்டா பார்பரா, கெயின் நிறுவன ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கால்சியம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் இ போன்ற முக்கிய சத்துக்களை போதுமான அளவில் உட்கொள்வதில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சி, 15 அத்தியாவசிய சத்துக்களின் போதுமான நுகர்வு குறித்த உலகளாவிய மதிப்பீடுகளை முதன்முறையாக வழங்கியுள்ளது.

நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்து 48 பேர் பலி

நைஜீரியாவில் ஒரு எரிபொருள் டேங்கர் லாரி, மற்றொரு லாரியுடன் நேரடியாக மோதியது, அதனால் ஏற்பட்ட வெடிப்பில் 48 பேர் பலியாகினர் என்று நாட்டின் அவசர சேவை பதிவுகள் கூறுகின்றன. இந்த டேங்கர் லாரி கால்நடைகளையும் கொண்டு வந்திருந்ததாகவும், குறைந்தது 50 கால்நடைகள் இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் ஒரே முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- சீனா- ரஷ்யா அணுசக்தி மின் நிலையம்?

இந்தியா மற்றும் சீனா, ரஷ்யாவுடன் இணைந்து சந்திரனில் அணுசக்தி மின்னிலயத்தை அமைக்க வாய்ப்புள்ளது என்று ஆசிய டைம்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான ‘டாஸ்’ மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோஸ் அட்டாமின் தலை வர் அலெக்சி லிகுஸ்செவ்  இந்த மின்னிலயத்தின் மின்சக்தி திறன் அரை மெகாவாட்வரை இருக்கும் என்கிறார். இதில் இந்தியாவும் சீனாவும் மிக ஆர்வ மாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.

2,000 போலீஸ் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்ட குற்றவாளி

பாஸ்டர் அபோலோ குயிபோலாய்,  தன்னைத் தானே “பிரபஞ்சத்தின்  இறைவன்” மற்றும் “தேவனால் நியமிக்கப்பட்ட மகன்” என்று கூறிக்கொள்பவர், அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் மிகவும் தேடப்படும் பட்டியலில் இருந்தார். அவர் பாலியல் வர்த்தகம் மற்றும் பாலியல் கொடூரங்கள் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் தவான் நகரில் 75-ஏக்கர் பரப்பில் உள்ள ஒரு கோட்டையில் அவர் ஒளிந்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடிச் சென்றனர்.