7 லட்சம் கியூப மக்கள் அமெரிக்காவை கண்டித்து போராட்டம்
கியூபாவில் சுமார் 7 லட்சம் மக்கள் திரண்டு அமெ ரிக்காவிற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கியூபா மீது சுமார் 60 ஆண்டுகால மாக அமெரிக்க பொருளாதார தடை விதித்து முடக்கி உள்ளது. மேலும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு களின் பட்டியலில் இணைத்துவிட்டது. இது அந்நாட்டின் வளர்ச்சியை பாதித்து அம்மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என ஐ.நா. அவையில் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்த போதும் அமெ ரிக்கா மட்டும் அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது
அதிவேகமாக ஓடிய கார் சந்தைக்குள் புகுந்து விபத்து
ஜெர்மனியில் அதிவேகமாக ஓடிய கார் கிறிஸ்துமஸ் விழாக்கால சந்தைக்குள் நுழைந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 68 பேர் படுகாயமடைந்துள் ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவூதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். இதனை பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் தாக்குதலுக்கான காரணத்தை ஜெர்மனி அரசு தெரிவிக்கவில்லை
பயங்கரவாதிகளின் தளபதியை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்
சிரியாவை கைப்பற்றிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) பயங்கரவாதிகள் அமைப்பின் தளபதியான தளபதி அஹ்மத் அல்-ஷாராவை வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் உயர்மட்ட வெளியுறவுத்துறை அதிகாரிகளின் குழு சந்தித்துள்ளது. இந்த சந்திப் பில் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது, சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இருந்து ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் அமை ப்பை நீக்குவது குறித்து அமெரிக்கா பேசும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் கசான் நகரில் உக்ரைன் டிரோன் தாக்குதல்
ரஷ்யாவின் கசான் நகர் மீது உக்ரைன் ராணு வம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. மிக உயரமான கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள் ளது. தாக்குதலின் போது கட்டிடத்தில் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிரிழப்புகள் தடுக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் மிக முக்கியமான நகரங்களுள் ஒன்று கசான் நகரம். உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு இந்த நகரில் தான் நடை பெற்றது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவின் எதிர் வினை பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
4 மாதத்தில் 100 பெண்கள் படுகொலை கென்யா அரசு அதிர்ச்சித்தகவல்
நான்கு மாதங்களில் சுமார் 100 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கென்ய அரசு தெரிவித்துள்ளது. 2023 செப்டம்பர் முதல், கென்யாவில் பாலியல் கொடுமை உள்ளிட்ட பெண்க ளுக்கு எதிரான 7,107 வன்முறைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை விரைந்து விசாரிக்க ஜனாதிபதி வில்லி யம் ரூட்டோ காவல்துறையை வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி, காதலர்/கணவர் உள் ளிட்ட இணையர்களால் பெண்கள் அதிக வன்முறையை அனுபவித்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.