world

img

தெற்கு ஈரானில் திடீர் வெள்ளம்: 17 பேர் பலி  

ஈரானில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு பாரஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.  

பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்துவந்த ஈரானில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக அம்மாகாணத்தின் இஸ்டபென் நகரில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ரவுட்பெல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீரில் மூழ்கியது.  இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.  

திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக்குழுக்கள் மீட்டதாகவும், குறைந்தது 6 பேர் காணவில்லை. தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக நகர ஆளுநர் யூசப் கரேகர் தெரிவித்தார்.

ஈரானில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.