கிழக்கு ஜெருசலேம், பிப்.6- ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் சுகாதாரக் கட்ட மைப்பையும் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியை யும் மனித நேயமற்ற முறையில் முழுமையாக அழித்து பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இன அழிப்பு செய்கிறது என பைசன் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுக்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் உபாய் அபூதி தெரிவித்துள்ளார்.
இதுவரை மக்கள் வாழ்ந்த பகுதிகளை வாழத் தகுதியற்றதாக ஆக்குகிறீர்கள் நீங்கள் என கடுமை யாக கண்டித்துள்ளார். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஏதோ 2023 அக்டோபர் 7 அன்று துவங்கியது அல்ல மாறாக ஆஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்தே மேற்குக் கரையில் சுகாதாரப் பாதுகாப்பு க்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நிலைமை இன்னும் மோசமாக மாற்றப்பட்டு விட்டது. 2023 ஜூன் மாதம் எல்லைக ளற்ற மருத்துவர்கள் அமைப்பு இருந்த பகுதிக்குள் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அதற்கு அடுத்து ஜூலையில் ஜெனின் நகரில் கலீல் சுலைமான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையில் இஸ்ரேல் படைகள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, ஆம்புலன்ஸ் சேவை களுக்கு இடையூறு ஏற்படுத்தியதையும் எல்லைக ளற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்குக் கரை முழுவதும் பாலஸ்தீனர்களுக்கு 2005 க்கு பிறகு மிகக் கொடுமையான ஆண்டு களாகவே இருந்து வந்துள்ளது. இஸ்ரேல் அரசு அமைத்து இருக்கும் சோத னைச் சாவடிகள் பாலஸ்தீனர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது அவர்க ளுக்கான ஆம்புலன்ஸ் சேவைகளை கிடைக்க விடாமல் துண்டித்து அவர்களை கடுமையான துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலைகளில் அவர்களுக்கு முழுமையான சிகிச்சைக்குப் பதில் வெறும் முதலுதவிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இது தான் அங்கு நடந்து வந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் துன்புறுத்தல்களால் அருகில் உள்ள சுகாதார மையத்தை அடையக்கூட பாலஸ்தீனர்களுக்கு பல மணிநேரங்கள் ஆகி யுள்ளதை காண முடிகிறது. 2023 ஆம் ஆண்டு போர் துவங்கிய பிறகு மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகளுடன் அவர்க ளின் உறவினர்கள் தங்குவதையும் உதவிக்கு உடன் இருப்பதையும் கூட இஸ்ரேல் தடுத்து வரு கிறது.இதனால் புற்றுநோய் உள்ளிட்ட நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ள நோயாளிகள் கடுமையான பாதிப்புகளையும் மன உளைச்சல்களையும் சந்தித்து வருகின்றனர்.
இவை அனைத்திற்கும் மேலாக, கடந்த மாதம் ஜனவரி 29 அன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில் உள்ள சினா மருத்துவமனையில் இஸ் ரேல் ராணுவம், சுகாதாரப் பணியாளர்களை போல, திடீரென பொது மக்களை போல உடை அணிந்து சென்று மூன்று பேரை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. காசா பகுதியைப் போல சுகாதாரக் கட்டமைப்பு களை, மேற்குக் கரையில் முழுமையாக சிதைக்க வில்லை என்றாலும் அவற்றை பாலஸ்தீனர்கள் பயன்படுத்த முடியாத வகையில் கட்டுப்படுத்துவ தன் மூலமும் தேவையான மருத்துவ உபகரணங்க ளை வாங்க அனுமதிக்காமலும் இடையூறு செய்து சிதைத்து இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறது.