world

சூழும் போர் மேகம்; மத்தியக் கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம்

டெஹ்ரான்/ டெல்அவிவ், அக். 2 - மத்தியக் கிழக்கில் கொலை வெறி பிடித்தலையும் இஸ்ரேல் மீது  பதிலடி நடவடிக்கையாக ஈரான் ராணுவம் 400-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

ராணுவத் தளங்களுக்கு குறி

மக்களின் வசிப்பிடங்கள் மீது  அல்லாமல், இஸ்ரேலின் டெல் அவிவ், நெகேவில் உள்ள நெவாடிம்  விமானப்படைத்தளம் (அமெரிக்கா வின் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படும் தளம்), ஹட்செரிம் ராணுவத் தளம், ரேடார்கள் மற்றும் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், மொசாத் உளவு அமைப்பின் தலைமையகம் ஆகிய  இடங்களை குறிவைத்து, சூப்பர் சானிக் ரக ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தி யுள்ளது.

மக்கள் மீது தாக்குதல் இல்லை

மக்களின் உயிருக்கு சேதம் ஏற்படாதவாறு, அதேநேரம் இஸ்ரேல் ராணுவம் கடுமையான சேதத்தைச் சந்திக்கும் வகையில், தங்களின் இஸ்பஹான், தப்ரிஸ், கோர்ரமாபாத், கார்ஸ், ஆர்க் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து ஈரான் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலை, இஸ்ரேலின் ‘ஏவுகணைத்தடுப்பு அமைப்புகளால்’ தடுக்க முடி யவில்லை என்று கூறப்படுகிறது.

ஈரானின் 80 - 90 சதவீதமான ஏவு கணைகள் இஸ்ரேலுக்குள் புகுந்து இலக்கைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரி வித்துள்ளன.

நெவாடிம் விமானத் தளம் கடும் சேதம்

இவற்றில், தாக்குதலுக்கு உள்ளான நெவாடிம் விமானத் தள மானது, 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நான்கு ஓடுபாதை களை கொண்ட மிகப் பெரிய விமானத் தளமாகும். இங்கு அமெரிக்கா தயாரிப்பான எப் 35 ஸ்டெல்த் அதிநவீன போர் விமானங்  கள், சி-130 போக்குவரத்து விமா னங்கள், போயிங் 707 டேங்கர் விமானங்கள், உளவு விமானங்களு டன் மூன்று படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இந்நிலையில், நெவாடிம் தளத்தை ஃபத்தா-1 என்ற ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி கடுமை யான சேதத்தை ஈரான் ஏற்படுத்தி இருப்பதுடன், 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் அழித்து ள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஃபத்தா-1 ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடை மறித்து தடுப்பது மிகுந்த சவா லானது என்றும் தகவல்கள் தெரி விக்கின்றன.

இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்காவும் அதிர்ச்சி

அந்த வகையில், ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலையச் செய்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலின் கூட்டாளி நாடுகளையும் ஈரானின் தாக்குதல் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக இஸ் ரேல் ராணுவம் எல்லை கடந்த பயங் கரவாதத்தில் ஈடுபட்டு வந்தது. ஜூலை 31 அன்று ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணைத் தாக்கு தல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் அர சியல் பிரிவுத் தலைவர் இஸ்மா யில் ஹனியேவை படுகொலை செய்தது. அப்போதே, இஸ்ரே லுக்கு உரிய பதிலடி கொடுக்கப் படும் என்று ஈரான் கூறியிருந்தது. 

3 மாதங்களில்  7 தலைவர்கள் படுகொலை

ஆனால், அதன்பிறகும் செப்டம் பர் 27 அன்று புரட்சிகர காவல்படை யின் தளபதியான பிரிகேடியர் ஜென ரல் அப்பாஸ் நில்ஃபோரூஷன், செப்டம்பர் 28 அன்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகிய முக்கியத் தலை வர்கள் உட்பட மொத்தம் ஏழு தலை வர்களை படுகொலை செய்தது.

லெபனான் மட்டுமல்லாது சிரியா, இராக் ஆகிய நாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவு குழுக் கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் பயங்கரவாத தாக்குதலை நடத்தி வந்தது. இந்த தாக்குதல்கள் எப் போது வேண்டுமானாலும் ஈரா னைப் போருக்குள் இழுக்கும் என்ற அபாயச் சூழலை உருவாக்கியது.