world

img

போர்க் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும்

கேப்டவுன்,நவ.22 -  போர்க்குற்றங்களின் அடிப்படை யில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகுவை டிசம்பர் மாதம் நடுப்பகுதிக் குள் கைது செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா முறையீடு செய்துள்ளது. இஸ்ரேல் காசா மீது போர் அறி விப்பு செய்ததில் இருந்து சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படு த்தியதோடு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், அகதிகள் முகாம்கள் என பொது மக்களுக்கு பாது காப்பு கொடுத்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தி 5000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 12,400 க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை கொலை செய்து போர்க்குற்றங்களை செய்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் நடுப்பகுதிக்குள் நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா முறையீடு செய்துள்ளது. “உலகம் இந்த செயலை அமைதி யாக  பார்த்துக்கொண்டு இருக்க முடி யாது” சர்வதேச நீதிமன்றம் இதை செய்யவில்லை என்றால், அது உலக ளாவிய நிர்வாகத்தின் “முழுத்  தோல்வி யை” உணர்த்தும் என்று  தென் ஆப்பிரிக்கா  அமைச்சர் கும்புட்ஸோ  தெரிவித்துள்ளார்.   வங்கதேசம், பொலிவியா, கோமோ ரோஸ், ஜிபௌட்டி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்கா, காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர்க்குற்றங் கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்க  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்  ஒரு பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.  

அக்டோபர் 7 அன்று நடைபெற்ற தாக்குதலில் 1200 மக்கள் கொல்லப்பட்ட னர் என்றும் தங்களை தற்காத்துக் கொள்ள இந்த தாக்குதலை நடத்துவ தாகவும் இஸ்ரேல் தனது செயலுக்கு நியாயம் கற்பித்து வருகிறது. மேலும் பாலஸ்தீன பொதுமக் களின் உயிரிழப்பைக் குறைக்க முயற்சிப்பதாகவும் கூறுகிறது.  ஆனால் உண்மையில் அவர்கள் “காசாவின்  பகுதியில் இருந்து  பாலஸ்தீன மக்களை துரத்தி விட்டு அந்த பகுதி முழுவதையும்  ஆக்கிர மிக்க முயற்சிக்கின்றனர்” என அமை ச்சர் கும்புட்ஸோ தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நீண்டகாலமாக பாலஸ்தீன உரிமைக்காக குரல் கொடுத்து வரும் நாடு. காசா மீது இஸ்ரேல் போர் அறிவித்த பிறகு  இஸ்ரேலில் இருந்து தங்கள் நாட்டுத்  தூதர்களை  திரும்பப் பெறுவதாக  அறி வித்தது. மேலும்  இஸ்ரேலின் தூதரின் நிலையை “ஏற்றுக்கொள்ள முடி யாதது” என்றும் கூறியது.  துருக்கி ஜனாதிபதி எர்டோகனும் இஸ்ரேல் பிரதமரை போர் குற்றவாளி யாக அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.