world

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

u     தற்காலிக போர் நிறுத்தம் முறிந்த காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய முதல் நாளே 200க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 589 பேர் காயமடைந்தனர் என காசா மருத்துவ அமைச்சகம் கூறியுள்ளது. 230 கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த முதல் நாள் தாக்குதலில் அற்புதமான நிகழ்வுகள் நடந்துள்ளன என ஒரு இஸ்ரேலிய அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
u     பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பீலே வேனசா, காசா போரை நிறுத்துவதிலும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதையும் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது எனவும் இஸ்ரேலுக்கு எதிராக முற்றிலும் எவ்வித ஆற்றலும் இல்லாத அமைப்பாக ஐ.நா. மாறிவிட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளார். 
u     உலகிலேயே இஸ்ரேல் மட்டும்தான் குழந்தைகளை ராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று தண்டனை தரும் தேசமாக உள்ளது. 2000 ஆண்டிலிருந்து இன்றுவரை 13,000 குழந்தைகள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 
u     அப்பாவி மக்கள் இறப்பை குறைக்கும் கடமை இஸ்ரேலுக்கு உள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை நிறுத்தினால் போரே நின்றுவிடும் என பிளிங்கன் அறியாதவரா என்ன?
u     போர் நிறுத்தம் முறிந்து போனது குறித்து கத்தார் மிகவும் வேதனை தெரிவித்துள்ளது. மீண்டும் போர் நிறுத்தத்துக்கு முயற்சிகள் நடக்கின்றன எனவும் கத்தார் கூறியுள்ளது.
u     ஜெருசலேம் பேருந்து நிலைய துப்பாக்கிச் சூடு நடத்திய பாலஸ்தீனர்கள் மீது யுவல டொரான் எனும் இஸ்ரேலியர் துப்பாக்கியால் சுட்டார். பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேலியரையும் சுட்டுக்கொன்றுவிட்டது. காரணம் புதிராக உள்ளது.
u     பிரிட்டன் தொழிலாளர் கட்சி ஸ்டேரமர் தலைமையின் கீழ் இஸ்ரேல் ஆதரவு நிலை எடுப்பதால் பிரிட்டன் முஸ்லீம்கள் வேகமாக அந்த கட்சியிலிருந்து அந்நியப்பட்டு வருகின்றனர் என பல பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளன. 
u     மீண்டும் போர் மூண்டதால் காசாவுக்கு செல்லும் பல உதவிப் பொருட்கள் எகிப்து எல்லையில் தேங்கி நிற்கின்றன. 
u     போர் மீண்டும் மூண்டதை அடுத்து இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.