world

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

u    4 நாள் போர் நிறுத்தத்தின் பொழுது ஹமாஸ் விடுவிக்கப்போகும் 50 பணயக்கைதிகளில் இஸ்ரேல் தேசத்தவர் எவரும் இருக்க மாட்டார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

u    ஹமாசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு செல்வது மிகவும் ஆபத்தானது என இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர் பென்-கிவிர் கூறியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரவையில் இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.

u    சியோனிசம் எனும் யூத இனவெறி என்றைக்குமே கொலைவெறி சித்தாந்தமாகவே இருந்து வந்துள்ளது. காசா படுகொலைகளுக்கு பின்னர்தான் உலகத்தின் பலரும் அதனை தெளிவாக உணர்ந்தனர் என பிரபல பத்திரிகையாளர் டேவிட் மில்லர் கூறியுள்ளார்.

u    ஆஸ்கர் மற்றும் எம்மி விருதுகள் பெற்ற பிரபல ஹாலிவுட் திரைப்பட கலைஞர் சூசன் சரான்டன் பாலஸ்தீன அதரவு நிலை எடுத்த காரணத்தால் அவர் நீக்கப்படுவதாக யுனைடெட் டேலண்ட் ஏஜென்சி எனும் ஹாலிவுட் நிறுவனம் அறிவித்துள்ளது.

u    சவூதி/ எகிப்து/ ஜோர்டான்/ பாலஸ்தீனம் ஆகிய தேசங்களின் அரேபிய அமைச்சர்கள் தூதுக்குழு முதலில் சீனா, பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பாலஸ்தீன பிரச்சனை குறித்து பேசியுள்ளனர். பிரிட்டன்/ பிரான்சு/ அமெரிக்கா ஆகிய வீட்டோ அதிகாரம் படைத்த தேசங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளனர்.

u    கனடா பல்கலைக்கழக மாணவர்கள் வாக்கெடுப்பில் 71.6சதவீதம் பேர் இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் கனடா அரசாங்கம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறது.

u    துருக்கியிலிருந்து பல தேசங்களின் செயற்பாட்டாளர்கள் அடங்கிய 1000 படகுகள் காசா துறைமுகத்துக்கு செல்வது என திட்டமிட்டுள்ளனர்.

u    இஸ்ரேலின் முன்னாள் ஐ.நா.வுக்கான தூதர் டேனி டேனன் காசா மக்களை உலகில் உள்ள ஒவ்வொரு தேசமும் சில ஆயிரம் பேரை அழைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இது சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த இன அகற்றல் என கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. 

u    காசாவில் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலை கண்டித்து ஏமனின் ஹவுதி அமைப்பு இஸ்ரேலின் ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளனர். செங்கடல் வழியாக செல்லும் எந்த ஒரு இஸ்ரேல் கப்பலும் தமது இலக்காக இருக்கும் எனவும் அறிவித்துள்ளனர். இது இஸ்ரேலுக்கு புது தலைவலியை உருவாக்கியுள்ளது.

u    பாலஸ்தீன இன ஒழிப்பு போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவாக பொய் செய்திகளை கூறுமாறு நிர்பந்திக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அன்னா போயர்(நியூயார்க் டைமஸ்)/ ஜாஸ்மின் ஹியூக்ஸ்(நியூயார்க் டைமஸ்) / பாசம் பொனவுனி(பி.பி.சி) போன்ற பல பத்திரிகையாளர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

- அ. அன்வர் உசேன்