டெல்அவிவ்/காசா, அக்.9- பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த இஸ்ரே லுக்கு எதிராக ஹமாஸ் இயக்கத்தினரின் பதிலடியும், இஸ்ரேலின் தாக்குதலும் தீவிர மடைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் லெபனான் எல்லையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ராணுவத்தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். போர் துவங்கிய முதல் நாளிலேயே பாதிப் போர் முடிந்து விட்டது என்றும் இஸ்ரேல் வெற்றி பெறும் என்றும் கூறிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் ஹமாஸ் பதிலடியைக் கண்டு விழி பிதுங்கி யுள்ளார். போரில் இஸ்ரேல் தாக்குப் பிடிக்க உதவுவதற்காக அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் கடற்கரையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.மூன்றாம் நாள் போரில் 91 குழந்தை களையும் 61 பெண்களையும் உட்பட 486 பாலஸ்தீனர்களைக் கொலை செய்துள் ளது இஸ்ரேல் ராணுவம்.
பொருளாதார முடக்கம்
உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் என அனைத்தையும் நிறுத்தி காசாமீது முழு முற்றுகைப் போரை இஸ்ரேல் அறிவித்துள் ளது. இந்த முற்றுகையின் ஒரு பகுதி யாக மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் காசாவிற்குள் செல்வது தடுக்கப்படும் என்ற அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் வெளியிட்டுள்ளார்.
போர்க் குற்றங்களில் ஈடுபடும் இஸ்ரேல்
இந்தப் போரில் இஸ்ரேல் போர் விதி முறைகளையும் மனித உரிமைகளையும் மீறி உலக நாடுகள் தடை செய்துள்ள வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை காசா மீது வீசியது.மேலும் காயமடைந்த வர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் களின் மீது வெடிகுண்டுகளை வீசி மீட்பு குழுவையும் கொலை செய்தது.காசாவில் இருந்த ஐநா அகதிகளுக்கான நிவாரண முகாம்களின் மீது திட்டமிட்டு குண்டுகளை வீசியது. போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக 500க்கும் மேற்பட்ட காசா பகுதிகளில் இடைவிடாது குண்டு மழை பொழிந்தது. இதனால் அகதிகள் முகாம்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மக்களின் வாழ்விடங்கள் அழிந்து காசா முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.1,23,500 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐநா சபை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது குற்றச்சாட்டு
ஹமாஸ் குழுவினரின் இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்துள்ளது எனவும் ஈரானின் புரட்சிகர இஸ்லாமிய காவல்படை ஆகஸ்ட் மாதம் முதல் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் பத்திரிகை குற்றம் சாட்டி யுள்ளது.இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் நாசர் கனானி தங்கள் நிலத்தை யும் உரிமையையும் மீட்க பாலஸ்தீனத் திற்கு போதுமான திறன் உள்ளது என்றதோடு ஈரான் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் பேரழிவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தார்.
பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி
மனித உரிமைகளுக்கான பாலஸ்தீன மையம் - ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு போருக்கான அடிப்படை காரணத்தை சரி செய்ய வேண்டும் என்றும் இஸ்ரே லின் கொலைவெறி தாக்குதல்களில் இருந்து பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டுள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூடி போர் நிறுத்தம் குறித்து ஆலோசித்தது. ஆனால் ஒருமித்த கருத்துக்கள் எட்டப் படாததால் இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. மூன்று பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகள், ஐ.நா.வின் செயலற்ற தன்மையே சமீபத்திய வன்முறைக்குக் காரணம் என்றும் , ஐநா உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு “உடந்தையாக” இருப்ப தாகவும் குற்றம்சாட்டியுள்ளன.
காசா நகரம்
இஸ்ரேலின் ஆக்கிர மிப்பினால் பல துண்டுகளாக சிதற டிக்கப்பட்ட பாலஸ் தீனம் தற்போது காசா மற்றும் மேற்கு கரையாக உள்ளது.இஸ்ரேலுக்கு எதிரான பல போர்களை தொடர்ந்தும், 1987 க்கு பிறகான பாலஸ்தீன விடு தலை இயக்கம், அதை தொடர்ந்து 1993-ம் ஆண்டு ஏற்பட்ட ஆஸ்லோ உடன்படிக்கையின்படி காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளை ஆளும் உரிமை பாலஸ்தீன தேசிய அமைப்பிற்கு கொடுக்கப் பட்டது. ஆனாலும் அவர்களுக் கான உரிமைகள் அமலாக்கப்பட வில்லை.40 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் மட்டுமே கொண்ட காசா உலகளவில் மிக குறுகிய பகுதியில் அதிக மக்கள் வாழும் பகுதியாக (22 லட்சம் மக்கள்) ஒரு திறந்த வெளி சிறை போல உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.
ஹமாஸ் தயாரித்த ஏவுகணைகள்
ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் என்ற பிரிவு காசா விலேயே இஸ்ரேல் ராணுவத்தின் ஏவு கணைகளை வழிமறித்து தாக்கும் வகையில் ஏவுகணைகளை தயாரித்துள் ளது. அந்த ஏவுகணையின் செயல்பாடு குறித்தான ஒத்திகை காணொலியை யும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.