பெய்ரூட், ஜூன் 11- லெபனானின் வளத்தைக் கொள் ளையடிக்க முயலும் இஸ்ரேலைத் தடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறோம் என்று லெப னானின் ஹெஸ்புல்லா அமைப்பு அறி வித்துள்ளது. லெபனானின் கடற்பகுதியில் ஏராளமான இயற்கை எரிவாயு வளம் உள்ளது. இதைக் கொள்ளையடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சித்து வரு கிறது. அத்தகைய முயற்சிகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட் டோம் என்று ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் நஸ்ரல்லா கூறி யுள்ளார். இது பற்றிப் பேசிய அவர், இந்த எதிர்வினை அமைதியான வழி யில் இருக்காது. லெபனானின் நிலம், நீர், எண்ணெய், எரிவாயு மற்றும் மரி யாதை ஆகியஅனைத்தையும் பாது காக்க வேண்டியது எங்கள் கடமையா கும். இத்தகைய பாதுகாப்பை வழங்க அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.