world

img

குலுங்கியது வாஷிங்டன் - பாலஸ்தீன ஆதரவு பேரணியில் திரண்ட 3 லட்சம் பேர்

வாஷிங்டன், நவ. 6 -  அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத  வகையில் 3 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர் கள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டி த்தும், மாபெரும் பேரணி நடத்தி, அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனையே திண றடித்துள்ளனர்.  பாலஸ்தீன மக்களின் மீது மூன்று வாரத்திற்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படு கொலைக்கு முழு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்காவைக் கண்டித்து, இங்கிலாந்து, ஜெர்மனி, அர்ஜெண்டினா, கிரீஸ், ஜோர்டான், துருக்கி, இராக், ஈரான், பாகிஸ்தான், இந்தோ னேசியா என உலக நாடுகள் முழுவதும் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூதர்கள் திரண்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர். மேலும் பல அமைப்புகள் அமெரிக்க நாடாளுமன்றக் குழு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளிக்கக் கூடாது என போராட்டம் நடத்தினர். எனினும், இவை அடையாளப் போராட்டங்கள் என்ற அளவிலேயே இருந்தன.

இந்தச் சூழலில்தான், இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு முழு அளவில் ஆதரவை யும், ஆயுதங்களையும் வழங்கி வரும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் 3 லட்சம் அமெரிக்கர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியால் நகரமே குலுங்கியுள்ளது. பாலஸ்தீனிய இளைஞர் இயக்கம், மக்கள் மன்றம், அல்-அத்வா, ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழுக்கள், பாலஸ்தீனம் திரும்புவதற்கான பாலஸ்தீன உரிமை மற்றும் பாலஸ்தீனத்தில் நீதிக்கான தேசிய மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பேரணியில் 3 லட்சம் பேர் திரண்டது, அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ‘இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்து வரும் நிதி யுதவி நிறுத்தப்பட வேண்டும்; காசாவில் உட னடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்; நதி  முதல் கடல் வரை பாலஸ்தீனம் விடுதலை பெறும்!  (From the river to sea)” என்று முழக்கங்களை எழுப்பிய வண்ணம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மாளிகை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தால் காசாவில் கொல்லப் பட்டவர்களின் பெயர்களின் நீண்ட பட்டியலை ஏந்திப் பிடித்தபடி, ‘பைடன் நீங்கள் மறைக்க முடியாது; உங்கள் மீது இனப்படுகொலை குற்றச் சாட்டை சுமத்துகிறோம்’ என்றும் போராட்டக் காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.