கொழும்பு, ஜூன் 20- இலங்கையில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடியினால் 40 லட்சம் முதல் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கையி லிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இலங்கையில் நிலவும் உணவு நெருக்கடியைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரி வித்துள்ளார். நாட்டின் உணவு பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இலங்கையில் தரிசாக கிடக்கும் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளை நிலங் களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் நடவடிக்கை யில் இராணுவம் ஈடுபடுத்தப்படும் எனக் கூறி யுள்ள ரணில், மீனவ மக்களுக்கு உணவு, எரி வாயு மற்றும் எரிபொருள் வழங்குவதில் முன்னு ரிமை அளிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டில் உணவுத் தேவையில் 40 சதவீதம் குறைந்திருந்த நிலையில், தற்போது நிலவும் விதைகள், உரங்கள், எரிபொருள் மற்றும் கடன் பற்றாக்குறையால் கடும் நெருக்க டியை சந்திக்கிறது இலங்கை. இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் அல்லது 4.9 மில்லியன் மக்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாக ஐ.நா. உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.