world

img

அவசர நிதியுதவி அளித்து உதவுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிக்கை

அவசர நிதியுதவி அளித்து உதவுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிக்கை வைத்துள்ளது

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள்,எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும் கடன் சுமையில் சிக்கியிருக்கும் இலங்கையின் பொருளாதார  நிலைமையை சரிசெய்ய ஏற்கனவே கடனில் சிக்கியிருக்கும் நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக, இலங்கை நிதித் துறை மந்திரி அலி சப்ரி தலைமையிலான அதிகாரிகள் வாஷிங்டனில் முகாமிட்டுள்ளனர். 

உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம்  அவசர நிதியுதவி அளித்து உதவுமாறு  இலங்கை உதவி கோரியுள்ளது. 

வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விரைவான நிதியளிப்பு முறையை கொண்டுவரும்  கோரிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மந்திரி முன்வைத்துள்ளார். உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை சமாளிக்க விரைவான நிதி உதவி தேவைப்படுகிறது என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே வேளையில், இலங்கை சார்பில் இந்தியாவும் அத்தகைய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பிரதிநிதித்துவத்திற்குப் பிறகே, இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.