world

img

இலங்கையில் மாணவர்கள் மீது அடக்குமுறை

இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர்.

இலங்கையில் நீடித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அந்நாட்டின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவரது இல்லத்தின் அருகே முகாமிட்டுள்ள மக்கள், கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகும் வரை அந்த இடத்திலிருந்து நகர மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். காவல்துறையினர் அமைத்திருந்த தடைகளை மாணவர்கள் நீக்கினர். இதனால் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை காவல்துறை வீசியது. போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.