2025 ஆம் ஆண்டுக்குள் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30% குறைத்துக்கொள்ள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுருத்தியுள்ளது.
ஒருவர் ஒரு நாளைக்கு 10.8 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். இது உலக சுகாதார நிருவனம் அறிவுருத்தும் அளவான 5 கிராமை விட இரண்டு மடங்கு அதிகமாதனதாகும் .உணவு பொருட்கள் ஏற்படுத்தும் பல நோய்களில் சோடியம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக்கொடுமையானது. இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பலநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் உப்பை குறைப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது.