வியன்டியான், ஏப். 6- தங்கள் மூன்று நாடுகளின் பொரு ளாதாரங்களை மேலும் இணைப்பதற்கு வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்டி யானில் நான்காவது மிகோங் ஆறு ஆணை யத்தின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் மற்றும் கம்போடியாவின் பிரதமர் டெச்சோ ஹன் சென் ஆகிய இரு வரும் லாவோசின் பிரமர் சோனெக்சே சைஃபன்டோனைச் சந்தித்துப் பேசினர். அப்போது தங்கள் நாடுகளின் பொருளா தாரங்களை மேலும் இணைத்துக் கொள்வதற்கு ஒப்புதல் தெரிவித்தார்கள். அவரவர் நாடுகளில் உள்ள சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பிரத மர்கள் பகிர்ந்து கொண்டனர். எந்தெந்த பகுதிகளில் ஒத்துழைப்பு இருக்க முடியும் என்பதையும், சர்வதேச நிகழ்வு களால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது என்ப தையும் விவாதித்திரு க்கிறார்கள். இந்த இணைப்பை வலுவாக வைத்துக் கொள்வதற்கு, உயர் மட்ட அளவிலான தொடர்புகள் இருந்நு கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்திருக்கிறது. சர்வதேசப் பொருளாதார நிலை மைகள் குழப்பமாகவும், கணிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன என்றும், கூடுதலாக சமூக வலைப் பின்னல் மற்றும் மின்னணு ஊடகங்கள் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள அதிவேக வளர்ச்சி தாக்கங்களையும், பாதிப்பு களையும் ஏற்படுத்துகின்றன என்றும் பிரதமர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை வாயிலாக பகிர்தலை அதிகப் படுத்த வேண்டும் என்றும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்றும் ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்.