டோக்கியோ, மே 24- புத்தர் காட்டிய வழியை இன்றைய உலகம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையேயான (குவாட்) உச்சி மாநாடு, உக்ரைன்-ரஷ்யா மோதல் தொடங்கி சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் அமைப்பின் நோக்கம் மேலும் விரிவடைந்துள்ளது. இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பரஸ்பர நம்பிக்கை, நமது உறுதி போன்றவை ஜன நாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் உலக அரங்கில் மிக முக்கிய இடத்தை குவாட் அமைப்பு பெற்றுள்ளது. நாற்கர கூட்டணி “நன்மைக்கான சக்தி”. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சி நிரலை குவாட் ஏற்றுக்கொண்டுள்ளது. இது நன்மைக்கான சக்தியாக குவாட்டின் செயல்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்றார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை அதி கரிப்பதற்காக குவாட் நாடுகளின் பங்களிப்பை யும் பிரதமர் பாராட்டினார். அதே நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் நெருக்கடி குறித்து மௌனம் காத்தார். முன்னதாக பிரதமர் மோடி, டோக்கி யோவில் உள்ள கான்டேய் அரண்மனையில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரைச் சந்தித்தார்.
திங்களன்று, மோடி டோக்கியோவில் உள்ள இந்திய மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ஜப்பானுடனான இந்தியாவின் உறவு, பலம், மரியாதை ஆகியவை உறுதியாக உள்ளது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான பங்காளிகள். இந்தியாவின் வளர்ச்சிப் பய ணத்தில் ஜப்பானிய முதலீடுகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. உலக சமூகம் அசாதாரணமான வேகத்தைக் கண்டுவருகிறது. இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை வளர்ப்பதில் ஜப்பான் முக்கியப் பங்குதாரராக இருப்பதாகக் கூறிய மோடி, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில், தில்லி-மும்பை தொழில்துறை வழித்தடம், சில சரக்கு வழித்தடங்கள் முதலானவை இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டுகளாக உள்ளன
புத்தர் காட்டிய வழியை இன்றைய உலகம் பின்பற்ற வேண்டும். வன்முறை, அராஜ கம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற இதுதான் ஒரே வழி. “பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை இந்தியா தான் வழிநடத்து கிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா கார்பன் இல்லாத நாடாக (“நிகர-பூஜ்ஜியம்”) மாறி விடும். இதற்காக சர்வதேச அளவில் சோலார் கூட்டணியைத் தொடங்குவது. உலகை கார்பன் இல்லாததாக மாற்றுவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியானது கொரோனா தொற்றுநோய்களின் போது கூட வங்கி அமைப்பு திறமையாகவும் திறம்படவும் செயல்படுவதை உறுதி செய்தது. உலகின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சத வீதம் இந்தியாவில்தான் நடக்கிறது என்றார்.