சர்வதேச அணுசக்தி முகமை போன்று செயற்கை நுண்ணறி வைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்துப் பல்வேறு கவலைகள் தெரிவிக்கப்பட்டு வருவதால் அவை குறித்து ஆய்வு செய்வதற்கு இத்தகைய கண்காணிப்பு அமைப்பு தேவைப்படும் என்று அவர் கூறினார்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மத்தியப் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது. அதில் பயணம் செய்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக் கிறார்கள். சுமார் 100 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
கடுமையான தட்பவெப்பநிலை காரணமாக 1980 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை ஐரோப்பிய சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வெள்ளங்கள், சூறாவளிகள், வெப்பக்காற்று, குளிர்க்காற்று, காட்டுத்தீ மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவற்றால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக் கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.