world

img

‘‘தியாகம் வீண்போகாது ; ஜனநாயகம் மீட்கப்படும்’’

46 பேர் படுகொலை

ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டங்கள் மீது நடந்த அடக்கு முறைக்கு இதுவரையில் 46 பேர் பலியாகியிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மக்கள் போராட்டக்களத்தில் இருக்கிறார்கள். மக்களை  அடக்குவதன் மூலம் போராட்டங்களை சமாளித்து விடலாம் என்று தற்போதைய ஜனாதிபதி போலுவார்ட்டே தலைமையிலான பெரு அரசு நினைத்தது. இதனால் மக்கள் தொடர்ந்து அடக்குமுறைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, போராட்டத்தை  பல அமைப்புகள் நிறுத்தி வைத்தன. அத்துடன் போராட்டங்கள் நின்றுவிடும் என்று  போலுவார்ட்டே தலைமையிலான அரசு நினைத்தது. ஆனால், கொண்டாட்டங் களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய போராட்டங்கள் கடந்த ஆண்டு நிறைவில் நடந்ததை விட பெரும் அளவில் வெடித்தன. பல மாகாணங்களில் வீதிகள்,  மக்கள் திரளால் நிறைந்து காணப்பட்டன. சில மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் கட்டாயம் அந்தந்த மாகாணங்களின் நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது. மக்கள் தடைகளை மீறி ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் இறங்கியிருப்பதால் அடக்குமுறையை அரசு அதிகரித்துள்ளது. இதனால் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.

லிமா, ஜன.13- தென் அமெரிக்க நாடான பெரு வில் அரசின் அடக்குமுறைகளை மீறி மக்கள் போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன. பெரு தலைநகர் லிமாவில் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சில  மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் திரள் வதைத் தடுக்க அரசு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. ஆனால், தொழிற்சங்கங்களும், இடதுசாரி அமைப்புகளும் ஒருங்கிணைத்து வரும் எதிர்ப்புப் பேரணிகளில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். போராட்டம் நடத்தி வரும் சமூக அமைப்புகளில் ஒன்றைச் சேர்ந்த ஓல்கா எஸ்பெஜோ, ‘‘இவ்வளவு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மக்களின் குரல்களைக் கேட்காமல் ஏன் இருக்கிறீர்கள், போலுவார்ட்டே? தயவு செய்து இந்தப் படுகொலைகளை நிறுத்துங்கள். வலதுசாரிகள் உங் களைப் பயன்படுத்திக் கொள் கிறார்கள். அதை நீங்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்’’ என்கிறார். தற்போது ஜனநாயகத் திற்கு விரோதமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பெட்ரோ காஸ்டில்லோ வுடன் இணைந்துதான் மக்களிடம் வாக்குகளைப் பெற்று, துணை ஜனாதிபதி ஆனார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘‘கொலைகாரர் போலுவார்ட்டே’’  என்ற முழக்கங்களும் பேரணியில் எழுப்பப்பட்டன. அட்டைகளால் செய்யப்பட்ட சவப்பெட்டிகளையும், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு மக்கள் வலம் வந்தனர். அரசுக்கு எதிரான முழக்கங்கள் பெரும் அள வில் எழுந்தன. மிகவும் அமைதியான முறையில் நடந்த இந்தப் பேரணி யில் மக்கள் இணைந்த வண்ணம் இருந்தனர். பெருவின் மற்ற நகரங்களிலும் இதுபோன்ற பேரணிகள் நடைபெற்றன.

அமைச்சர் பதவி விலகல்

ஜனவரி 12 அன்று மக்களின் ஆவேசமான பேரணி நடந்து கொண்டிருக்கும்போதே தொழிலாளர் துறை அமைச்சர் எடுவர்டோ கார்சியா தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மக்கள் உயிரிழந்ததற்கு அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், தவறுகள் நடந்துள்ளன. அந்தத் தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்பதை அரசு  அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக் கிறார். ஏப்ரல் 2024 வரையில் எல்லாம் மக்களால் காத்திருக்க முடியாது. தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜனவரி 11-ஆம் தேதியன்று பெருந்திரள் அஞ்சலி ஊர்வலம் நடந்தது நூற்றுக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்று காவல்துறை யின் அடக்குமுறைக்குப் பலியான வர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். சிலியில் தெற்குப் பகுதியில் உள்ள ஜூலியாகா நகரில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் நிறைவில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கொலைகளுக்கு நீதி  கிடைக்க வேண்டும் என்று கொல்லப் பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இவர்களின் தியாகம் வீண்போகாது. ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் என்று நிகழ்வில் பங்கேற்ற பலரும் உறுதியளித்தனர்.