பனாமா சிட்டி, ஜூலை 13- ஆட்சியாளர்களின் வலதுசாரிக் கொள்கைகளால் கடும் துயரத்துக்குள்ளாகி யுள்ள பனாமா மக்கள் தங்கள் நாட்டின் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். பெருந்திரள் பேரணிகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு உள்ளிட்ட கொள்கைகளை வலதுசாரி ஆட்சியாளர்கள் தீவிரமாக நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். அரசின் செலவு களைக் குறைக்கிறோம் என்ற பெயரில் வலதுசாரிகள் வழக்கமாக செய்யும் வேலையை இவர்களும் செய்கிறார்கள். சுமையை மக்கள் தலை மீது ஏற்றிவிட்டு, பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். கவுரவமான வாழ்க்கையையே தொழிலாளர்கள் வாழ விரும்புகிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
போராட்டத்தின் தீவிரத்தைக் கண்ட ஜனாதிபதி லாரெண்டினோ கோர்டிசோ, போராடும் அமைப்புகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார். திரட்டப் பட்ட மக்களின் உரிமைக்கான தேசியக் கூட்டணி என்ற அமைப்பு வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரு கிறார்கள். பனாமாவின் வேரகாஸ் என்ற மாகா ணத்தில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை யில் கலந்து கொள்ள இந்த அமைப்பு ஒப்பு தல் தெரிவித்துள்ளது. போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் மற்றொரு அமைப்பான வாழ்க்கைக் கான ஒன்றுபட்ட மக்கள் கூட்டணியும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கும். இந்நிலையில் போராட்டங்களுக்கு ஆதரவாக தொழி லாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
கட்டு மானத் தொழிலாளர்களுக்கான தேசிய சங்கம் 24 மணிநேர வேலைநிறுத்தத்தை ‘‘எச்சரிக்கைப் போராட்டமாக’’ நடத்தப் போகிறார்கள். போராட்டத்தை நடத்தி வரும் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தால், தாங்களும் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று சங்கம் கூறியுள்ளது. இந்த சங்கத்தின் செயலாளரான சால் மெண்டிஸ், ‘‘பிரச்சனைக்கான தீர்வு இருக்கவே செய்கிறது. ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு உதவுவதற்காக அதைச் செய்ய ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார். செவ்வாயன்று நடந்த பேரணி அண்மைக்காலங்களில் நடை பெற்ற எதிர்ப்புப் பேரணிகளில் மிகப் பெரிய ஒன்றாகும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திட்டவட்டமான நடவடிக்கையை எடுங்கள் என்று ஆட்சி யாளர்களை சங்கங்கள் வலியுறுத்தி யுள்ளன.