world

குஜராத் மாடல் என்பதே அவுட்சோர்சிங்-தான்! காவல்துறையிலேயே காண்ட்ராக்ட் ஊழியர்களை கொண்டு வந்தவர் மோடி!

போபால், ஜூன் 21 - காவல்துறையிலேயே காண்ட்ராக்ட் ஊழியர்களைக் கொண்டு வந்தவர்தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ம.பி. மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார். ராணுவத்தில் காண்ட்ராக்ட் அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் ‘அக்னிபாத்’ திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள பின்னணியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதொ டர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் திக்விஜய் சிங் மேலும் கூறியிருப்பதாவது: “பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஸ்பெஷாலிட்டி’ என்ன வெனில் எந்த ஒன்றையும் முதலில் அறிவித்து விடுவார், அதன் பிறகு சிந்திப்பார், அறிவிப்பதற்கு முன் சிந்திப்பது கிடையாது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவு களையே எடுத்துக் கொள்ளுங்கள். கள்ள நோட்டை ஒழிக்கத்தான் பணமதிப்பு நீக்கம் என்றார்கள் ஆனால் அப்போது 17.5 லட்சம் கோடியாக இருந்த கள்ள நோட்டுகள் இப்போது 28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ‘மோடி மாடல் அரசு’ என்பதே அவுட்சோர்சிங் செய் வதுதான். காவல்துறையினர் கூட குஜராத்தில் ஒப்பந்த ஊழி யர்கள்தான். இதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இப்போது அக்னிபாத் மூலம் ராணுவத்திலும் இதையே மோடி திணிக்கிறார். இதன்மூலம் நம் உயர் தொழில் நேர்த்தி கொண்ட ராணுவத்தின் மீதான புகழுக்குக் களங்கம் விளை விக்கிறார். இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், நாட்டை மதத்தின் பெயரால் பிளவு படுத்திக் கொண்டிருக்கி றார்கள். இனம், மதம், மொழி ரீதியாக பிரித்தாள்வது நல்ல அரசியல் அல்ல! அரசியல் போர்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன. ஆனால் நம்பிக்கை அடிப்படையில் எந்த ஒரு போரும் இந்தியாவில் நடந்ததில்லை. இந்தியாவில் மதரீதி யான போர்கள் நடந்ததில்லை.  இந்த உண்மையை காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொண்டு செல்லும். காங்கிரசின் அடுத்த பயணம் மத நல்லிணக் கத்தை நோக்கித்தான். ‘மத நல்லிணக்கம்’, ‘வேற்றுமை யில் ஒற்றுமை’ போன்ற நம் அரசியல் சாசன ஆன்மாவுக்கு  வடிவம் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.