இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. 10 கி.மீ. ஆழத்திற்கு இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்ததாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் கழகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி எது என்பதையும் அந்த கழகம் கண்டுபிடித்திருக்கிறது.