பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலம் டேரா டூன் ராஜ்புத் சாலை யில் அமைந்துள்ளது ரிலை யன்ஸ் நிறுவனத்தின் நகைக் கடை. வழக்கம் போல வியாழ னன்று காலை 10:20 மணிக்கு ஊழி யர்கள் நகைக்கடையை திறந்த னர். அடுத்த 5 நிமிடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் கடைக்கு உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில், வாடிக்கையாளர்கள், ஊழி யர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 15 பேரையும் சிறைபிடித்தனர்.
தொடர்ந்து 3 பெண் ஊழி யர்களை தவிர மற்ற அனைவரின் கைகளையும் இரண்டு மர்ம நபர் கள் கட்டிய நிலையில், 3 பெண் ஊழியர்களிடம் நகைகளை எடுத்து தருமாறு கூற, அவர்கள் உயிருக்குப் பயந்து நகைகளை எடுத்து தந்தனர். 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் அந்த கும்பல் வேறு வாகனத்தில் தப்பியது.
டிஜிபி அலுவலகம் அருகில்
கொள்ளையடிக்கப்பட்ட ரிலையன்ஸ் கடைக்கு அருகே காவல்துறை தலைமை அலு வலகம் (டிஜிபி) உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. ரிலையன்ஸ் கடை உள்ளிட்ட அப் பகுதி போலீசார் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ள நிலையில், இதையெல்லாம் மீறி கொள்ளை யர்கள் ரூ.20 கோடி மதிப்புள்ள நகையை அள்ளிச்சென்றுள்ளனர்.
ரிலையன்ஸ் ஜுவல்லரி நிறு வன ஷோரூம் மேலாளர் சவுரப் அகர்வால் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீ சார், 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வரு கின்றனர்.
அதிகாரிகளை கண்டித்த முதல்வர்
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் திருட்டு என்றதும் உத்தரகண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உடனடியாக நேரில் அழைத்து கண்டித்துள்ளார். மேலும் மற்ற சம்பவங்களை விட்டுவிட்டு ரிலையன்ஸ் கொள்ளை சம்பவ குற்றவாளிகளை விரைந்து பிடிக்குமாறு டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தக வல் வெளியாகியுள்ளது. ரிலை யன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடி யின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமா னது என்பது குறிப்பிடத்தக்கது.