டாக்கா, ஜூலை 21- அரசு வேலை வாய்ப்பு இட ஒதுக் கீட்டு முறையில் மாற்றம் செய்து திறமை யின் அடிப்படையில் வேலை வழங்க வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 93 சதவீத இடங்களை திற மையின் அடிப்படையிலும் 7 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பு மாறு தீர்ப்பில் கூறியுள்ளது. இடஒதுக்கீடு நடைமுறை வங்கதேச அரசுப் பணியிடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு களுக்கு 30 சதவீதம், பின் தங்கிய மாவட் டத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சத வீதம், பெண்களுக்கு 10 சதவீதம், சிறு பான்மையினருக்கு 5 சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதம் என 56 சத வீத இடஒதுக்கீடு நடைமுறை அமலில் உள்ளது. மாணவர்களின் போராட்டம் 1971 வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் கொடுக்கப்பட்டு வரும் 30 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் எனவும் திறமையின் அடிப்படையிலேயே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் வங்கதேச மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டில் அதிகரித்துள்ள வேலை யின்மையால் தவித்து வரும் மாண வர்கள் இந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் திரும்பப்பெற வேண்டும் என வும், பெண்கள் மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மாவட்டத்தில் உள்ளவர் களுக் கான இடஒதுக்கீடு தொடரட்டும் எனவும் கூறி வந்தனர். மாணவர்கள் போராட்டத்தின் கார ணமாக ஹசீனா அரசு 2018 ஆம் ஆண்டு அந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை மீண் டும் அமல்படுத்தியதை தொடர்ந்து ஜூலை 5 முதல் மீண்டும் போராட்டம் வெடித்தது.போராட்டம் வன்முறை யாக மாறியது. இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதி மன்றம் ஜூலை 21 அன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு இந்நிலையில் உச்சநீதிமன்றம் 93 சதவீத வேலைகள் தகுதியின் அடிப்ப டையில் மட்டுமே ஒதுக்கப்பட வேண் டும் என உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 7 சதவீதத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் களின் வாரிசுகளுக்கு 5 சதவீதம் மட் டுமே வழங்கலாம் என உத்தரவிட்டுள் ளது. மீதமுள்ள 2 சதவீதம் சிறு பான்மை, திருநங்கையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப் படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.